சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி ஆலை.. அதென்ன கொரில்லா கண்ணாடி?
சென்னை: சென்னை அருகே ரூ 1000 கோடியில் கொரில்லா கண்ணாடி தயாரிப்பு நிறுவனம் அடுத்த ஆண்டு அமையவுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கார்னிங் எனும் நிறுவனம் ஆப்பிள் ஐபோனுக்கு பாதுகாப்பு கண்ணாடி தயாரித்து வருகிறது. இதற்கான ஆலை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிள்ளைப்பாக்கத்தில் அமையவுள்ளது.

பிளக்ஸ்ட்ரானிக்ஸ், பாக்ஸ்கார்ன் ஆகிய நிறுவனங்கள் இயங்கி வரும் ஸ்ரீபெரும்புதூரிலேயே கார்னிங் நிறுவனமும் அமையவுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் நடைபெறுகிறது.
பிள்ளைப்பாக்கத்தில் 25 ஏக்கர் இடத்தில் இந்த தொழிற்சாலை அமையவுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக 300 பேருக்கு வேலைவாய்ப்புகள் தரப்படும். இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கு பாதுகாப்பு கண்ணாடியை சப்ளை செய்யும் நிறுவனம் இந்தியாவில் அமைகிறதையே காட்டுகிறது.
முன்னதாக தெலுங்கானாவில் செப்டம்பர் மாதம் இந்த நிறுவனம் அமைவதாக இருந்தது. ஆனால் தெலுங்கானாவை விட தமிழகத்திலேயே இந்த நிறுவனத்தை அமைக்க நிர்வாகத்தினர் விரும்பினர்களாம். தமிழகத்தில் மின்னணு பொருட்கள் உற்பத்திக்கான சூழல் உள்ளது. மேலும் ஆப்பிள் ஐபோனுக்கு இதர உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் தமிழகத்தில் உள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டால் நிறுவனத்தை அமைக்க ஓராண்டு ஆகும் என தெரிகிறது. பாக்ஸ்கான், பெகட்ரான், டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆகிய ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய உற்பத்தியாளர்களுக்கு தமிழகம் தாய் வீடாக திகழ்கிறது. இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டவுடன் முதலில் 30 மில்லியன் எண்ணிக்கையில் கண்ணாடிகளை தயாரிக்கும்.
இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் கண்ணாடிகள் ஆப்பிள் ஐபோன், ஐபாடுகளுக்கு பாதுகாப்பு அம்சங்களாக திகழ்கின்றன. இவற்றை கீழே போட்டாலும் போனுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. இந்த நிறுவனம் இந்த கண்ணாடி மட்டுமல்லாமல் பீங்கானையும் உற்பத்தி செய்கிறது. இந்த கண்ணாடி அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்டது. மெல்லிய தடிமன் கொண்டதாகும்.
கொரில்லா குரங்கை பயன்படுத்தி அதன் ரோமங்களை வைத்துதான் இந்த கண்ணாடிகள் தயாரிக்கப்படுவதாகவும் இதற்காக நிறைய கொரில்லாக்களை கொல்வதாகவும் தகவல்கள் வந்தன. இதை யாரும் நம்ப வேண்டாம். அயனி மாற்றம் அடைவதால்தான் அந்த கண்ணாடிகள் மிகவும் வலிமையானவைகளாக இருக்கின்றன. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் நடந்தது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications