கொரோனா ஊரடங்கு முதல் நாள்.. சென்னையில் வீடுகளில் முடங்கிய பொதுமக்கள்.. முக்கிய சாலைகள் வெறிச்சோடின
சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாகத் தலைநகர் சென்னையில் மக்கள் வீடுகளில் முடங்கியதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 30,000 நெருங்குகிறது.
இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்று முதல் வரும் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு காரணமாகச் சென்னையில் உள்ள சாலைகள் வாகன போக்குவரத்து, ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டன. முழு ஊரடங்கு முறையாகக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யச் சென்னையிலுள்ள முக்கிய, இணைப்பு சாலைகளில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய பொருட்கள், விவசாய விளை பொருட்களுடன் வந்த வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட்டது. ஹோட்டல்களில் பார்சல்கள் மட்டும் வழங்கப்பட்டன. பெட்ரோல் பங்க், மருந்துக் கடைகள் வழக்கம் போலச் செயல்பட்டன. சென்னையில் பெரும்பாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவில்லை.
இருப்பினும் சென்னையை முக்கிய இடங்களில் வாகன போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசாருடன், ஒரு சிலர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவைக்காகவே வெளியே வந்துள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
முழு ஊரடங்கில் பொதுமக்கள் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கு சமயத்தில் மக்களிடம் போலீசார் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என டிஜிபி திரிபாதி அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications