இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்.. தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு.. வெடிகுண்டு சோதனை
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோவில், பஸ், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, கார்த்திகை தீபவிழா நடைபெறும் திருவண்ணாமலையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களாகவே கோவில், பஸ், ரயில் நிலையங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சந்தேகத்துக்குரிய இடங்களில் மோப்பநாய்கள் சோதனையிட்டன.

1.20 லட்சம் போலீஸ் பாதுகாப்பு
இந்நிலையில் தான் பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று பாதுகாப்பு இன்னும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் கார் வெடிப்பு நிகழ்ந்த நிலையில் தமிழக போலீசார் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி தமிழ்நாட்டில் இன்று கோவில், பஸ், ரயில் நிலையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மொத்தம் 1.20 லட்சம் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெடிகுண்டு சோதனை
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது. சில இடங்களில் போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை, கோவை உள்பட தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.

உடைமைகள் சோதனை
மேலும் தமிழக ரயில் நிலையங்களில் மட்டும் 3000 ரயில்வே போலீசார் உள்பட மொத்தம் 4,300 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் நுழையும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பஸ் நிலையங்களிலும் சோதனை தொடர்கிறது.

கோவை-திருவண்ணாமலைக்கு தனிகவனம்
மேலும் தமிழகத்தில் தீபாவளியையொட்டி நடந்த கோவை கார் வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முன்னதாக கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சுகள் நடந்தன. இதனால் கோவையில் தனிக்கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அங்கு 3000 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா பரணி தீபத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதனால் அங்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications