Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திசை தெரியாமல் தடுமாறும் பாஜக.. தமிழகத்தில் அமித்ஷா கணக்கு அத்தனையும் நொறுங்குதே? பாமக குறுக்கே தவெக

Subscribe to Oneindia Tamil

சென்னை: "பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.. இந்திய அரசியலின் சாணக்கியன் என்று கருதப்படும் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் உள்விவகாரங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்" என்று தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார் பத்திரிக்கையாளர் மணி.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "அதிமுக பாஜக கூட்டணி அறிவிப்புக்கு பிறகு, எந்த கட்சியுமே என்டிஏ கூட்டணிக்கு வரவில்லை.. என்டிஏவில் இருந்த ஓபிஎஸ், டிடிவி போன்றோர் வெளியேறிவிட்டார்கள்.. அதிமுகவில் இருந்த செங்கோட்டையனும் வெளியேறிவிட்டார்..

பாமக - அப்பா - மகன் சண்டை

அதிமுகவுக்கு அடுத்தபடியாக வலுவான கட்சியாக கருதப்பட்டது பாமகதான்.. 4 சதவீதம் ஓட்டுக்களுடன், வடமாவட்டங்களில் 50 தொகுதிகளில் 8 முதல் 10 சதவீத வாக்குகளை பெற்றுள்ள கட்சி.. இவர்களும் இந்த முறை பாமக போன்ற கட்சிகளுக்கு அந்த வலிமை குறைந்துள்ளது..இதற்கு முக்கியக் காரணமாக பாமகவில் நிலவும் அப்பா-மகன் சண்டைதான். டெல்லிக்கு போய் மகன் மீது புகார் தருவது, சிபிஐ விசாரணை கோருவது என வித்தியாசமான சம்பவங்கள் நடந்து வருகின்றன..பாமகவுக்கு நேர் எதிரியான கட்சியான விசிககூட இதுவரை அப்படியொரு கோரிக்கை வைக்காத நிலையில, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள்கூட அப்படியொரு கோரிக்கை வைக்காத நிலையில், மகனுக்கு எதிராக சிபிஐ விசாரணையை துரிதப்படுத்தும்படி கோரி உள்ளார் ராமதாஸ்.. மொத்தத்தில் பாமக என்பதே சின்னாபின்னமாக கிடக்கிறது.. இதனால் என்டிஏ நொறுங்கி போய் கிடக்கிறது.

பாஜகவுக்கு மிகப்பெரிய சேலஞ்ச்

ஆனால் திமுக வலுவான கூட்டணியாக உள்ளது.. மக்கள் நலத்திட்டங்களிலும் திமுக வலுவாக உள்ளது, சித்தாந்த ரீதியாகவும் பாஜகவை எதிர்ப்பதில் ஒன்றுபட்ட கூட்டணியாக திமுக வலுவாக உள்ளது.. இதுல எங்கிருந்து அமித்ஷா கனவு நனவாவது? அந்தவகையில் பாஜகவுக்கு தமிழகம் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்து கொண்டிருக்கிறது.அதிமுக உதவி இல்லாமல் பாஜகவால் 1 சதவீதம்கூட ஜெயிக்க முடியாது.. இதனால் பாஜகவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. மற்ற மாநிலங்களை போல அமலாக்கத்துறை, சிபிஐ போன்றவற்றை ஏவிவிட்டு, ராமதாஸ் போன்றவர்களை எல்லாம் வழிக்கு கொண்டுவர முடியாது.. காரணம், அவர் ஒரு சமுதாய தலைவர். ஏதாவது நடவடிக்கை எடுத்தால், ஒட்டுமொத்த சமுதாயமும் பாஜகவுக்கு எதிராக திரும்பிவிடும். இதேதான் அன்புமணி விஷயத்திலும் நடக்கும்..ராமதாஸை சமாதானப்படுத்த குருமூர்த்தி, சைதை துரைசாமி முதல் 16 பேர் பஞ்சாயத்துக்கு வந்தார்கள்.. ஒன்னுமே வேலைக்காகவில்லை.. அதனால்தான் கூட்டணியும் வலுவாகவிலலை..

விஜய்க்கு செல்லும் பாமக ஓட்டு

விஜய்யும் வழிக்கு வரவில்லை.. இதனால் பாமகவின் வாக்கு வங்கி கணிசமாக நடிகர் விஜய்யின் கட்சி நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.. 2011 தேர்தலில் விசிக மற்றும் பாமக வாக்குகள் எப்படி விஜயகாந்திற்கு சென்றதோ, அதேபோல் இப்போது விஜய்க்கு செல்லக்கூடும்..நான்கு முனைப் போட்டி நிலவினால் அது திமுகவிற்கே நேரடி பலனை தரும்.. அரசுக்கு மிகப்பெரிய கெட்ட பெயர் வராத வரை திமுகவின் கை ஓங்கியிருக்கும்.. அந்தவகையில் தமிழகத்தில் பாஜக திசை தெரியாமல்தான் திண்டாடி கொண்டிருக்கிறது.

அரசியல் சாணக்கியன் அமித்ஷா

அமலாக்கத்துறை சோதனைகள் இப்போது ஒரு "பூச்சாண்டியாக" மட்டுமே பார்க்கப்படுகிறது.. மக்கள் இதைப் பார்த்து பார்த்து பழகிவிட்டார்கள்.. திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது வழக்குகள் இருந்தாலும், அனைவரையும் கைது செய்வது சாத்தியமில்லை; அப்படி செய்தால் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும்.பாஜக கூட்டணியில் இருப்பவர்கள் மீது ஊழல் புகார்கள் இருந்தாலும் அவர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை.. இந்திய அரசியலின் சாணக்கியன் என்று கருதப்படும் அமித்ஷா, தமிழகத்தில் அதிமுக மற்றும் பாமகவின் உள்விவகாரங்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+