சிலிண்டர் தட்டுப்பாட்டிலும் தடையின்றி இயங்கும் அம்மா உணவகங்கள்.. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
சென்னை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சுமார் 16 நாட்களாக நடைபெற்று வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுத்தி வருகிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஸ்தம்பிக்க தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடிகளிலும் இயங்கும் சென்னை அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. (Amma unavagam)
ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டு வரும் போர் உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

ஈரானில் இருந்து பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் கடல் போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் சமையல் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உணவகங்கள் மூடல், உணவு பட்டியல் குறைப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்ற நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள்.
வீட்டு பயன்பாடு முன் பதிவுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். தேவைக்கு மட்டும் முன்பதிவு செய்ய வேண்டும். தேவையற்ற முன்பதிவுகளை தவிர்க்க வேண்டும். பதுக்கல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதனால் பிரபல உணவகங்ளே தடுமாறி கொண்டிருக்கின்றன. சென்னையில் பல பிரபல உணவங்கள் மூடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் அம்மா உணவகங்கள் சீராக இயங்கி வருகின்றன. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் வருகை 25-50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக அண்ணா நகர், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. பொது மக்கள் வருகை அதிகரித்துள்ளதால், அம்மா உணவகங்களில் தேவையான கேஸ் சிலிண்டர்கள் இருப்பதை உறுதி செய்து தடையின்றி உணவளிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications