அரசியல் கட்சியாக 'அமமுக'.. சசிகலாவுக்கு பதில் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாத நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தனது இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய தினகரன் திட்டமிட்டுள்ளார். இதனிடையே சசிகலாவுக்கு பதில் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் பிரிந்து சென்ற டிடிவி தினகரன் ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு எம்எல்ஏவாக மாறினார்.
அதன்பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை டிடிவி தினகரன் மிக பிரம்மாண்டமாக ஆரம்பித்தார். ஆனால் இந்த இயக்கம் அரசியல் கட்சி இல்லை என்றும் அதிமுகவின் மாற்று அணி தான் என்றும் அப்போது கூறினார்.

சின்னம் கேட்டு வழக்கு
தொண்டர்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாக கூறி அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னத்தை கேட்டு டிடிவி தினகரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இரட்டை இலை, அதிமுக கட்சி இரண்டுமே ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிக்கே என நீதிமனறத்தில் தீர்ப்பு வந்தது.

கைவிரிப்பு
இதற்கிடையே மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கைவிரித்தது. இதனால் நீதிமன்றத்தில் போராடிய தினகரனிடம், கட்சியை பதிவு செய்தால் தான் ஒரே சின்னம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

சுயேட்சைகள்
எனினும் பரிசுப்பெட்டி சின்னம் உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தினகரன் அணிக்கு கிடைத்தது. ஆனால் ஒரே சின்னம் வழங்கப்பட்டாலும், இவர்கள் அனைவரும் சுயேட்சைகளாகவே கருதப்படுவர் என உச்சநீதிமன்றம் அன்றைக்கு தீர்ப்பில் தெளிவாக குறிப்பிட்டு இருந்தது.

தேர்தல் ஆணையத்தில்
இதன் காரணமாக தேர்தல் முடிந்த கையோடு தனது அமமுக இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற தினகரன் முடிவு எடுத்துள்ளார். இதன்படி அடுத்த ஒரு வாரத்தில் அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடிவுசெய்துள்ளார்.

கட்சிக்கு சின்னம்
தேர்தல் ஆணையத்தில் அமமுகவை பதிவு செய்தால், சுயேட்சை வேட்பாளர்களாக இனி போட்டியிட வேண்டியது இல்லை. ஒரே சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும் என்பதால் தினகரன் இந்த முடிவினை எடுத்துள்ளார். இந்நிலையில் இன்று நடந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் அமமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சசிகலாவை தினகரன் பொதுச்செயலாளர் என அறிவித்து இருந்த நிலையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications