Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆவினுக்கு எதிராக போட்டி போடல.. விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கவே நினைக்கிறோம்.. அமுல் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், அமுல் நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அமுல் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதினார்.

Amul clarifies over the issue of milk procurement in tamilnadu

அந்தக் கடிதத்தில், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது என்றும், அமுல் பால் கொள்முதல் செய்தால் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்திருந்தார்.

அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய எல்லை தாண்டிய கொள்முதல், பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும் சூழல் ஏற்படும் என்றும் கவலை தெரிவித்திருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.

Amul clarifies over the issue of milk procurement in tamilnadu

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அமுல் நிறுவன ஒப்பந்ததாரர்கள் விளக்கமளித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆவினுக்கு எதிராக வியாபாரம் செய்ய மாட்டோம். ஆவின் நிர்ணயித்துள்ள கொள்முதல் விலையையே நாங்களும் நிர்ணயித்து கொள்முதல் செய்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள விளக்கத்தில், "ஆவின் நிறுவனத்தைவிட அதிக விலைக்கு அமுல் பால் கொள்முதல் செய்வதாகக் கூறும் தகவல் பொய்யானது. ஆவின் நிறுவனம் விவசாயிகளுக்குக் கொள்முதல் விலையாக என்ன நிர்ணயம் செய்திருக்கிறதோ, அதே விலைக்கு மட்டுமே அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்யும்.

Amul clarifies over the issue of milk procurement in tamilnadu

தமிழ்நாட்டில் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தியாகிவரும் நிலையில், 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமிருக்கும் பால் தனியார் நிறுவனங்கள் மூலம் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் விழாக் காலங்களில் அதிக தொகைக்கும், மற்ற காலங்களில் குறைவான விலைக்கும் மட்டுமே கொள்முதல் செய்கின்றன.

இதனால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத் தவிர்க்கும் விதத்தில் மட்டுமே அமுல் செயல்படும். ஆவின் நிறுவனத்துக்கு எதிராகச் செயல்படாது. ஏற்கெனவே ஆவின் நிறுவனத்துக்குப் பால் வழங்கிவரும் நபர்கள், அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டுமென்றால் ஆவின் நிறுவனத்திலிருந்து NOC சான்றிதழ் பெற்றுவர வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்கின்றன.

எனவே, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. ஆவின் நிறுவனத்தில் பால் முகவர்களாக இருக்கும் யாரிடமும் அமுல் நிறுவனத்துக்குப் பால் வழங்க வேண்டும் எனப் பேச்சுவார்த்தை நடத்தவில்லை" எனத் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+