தமிழகத்தின் 3 பெரிய ஆளுமைகளின் இறுதி சடங்கில் பொறுப்பேற்றது எனது பாக்கியம்.. அமுதா ஐஏஎஸ் நெகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தின் 3 பெரிய ஆளுமைகளின் இறுதிச் சடங்கில் பொறுப்பேற்று பணிபுரிந்தது பாக்கியம் என அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
மதுரைச் சேர்ந்த அமுதா 1994 ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியானார். இவர் கடலூரில் துணை ஆட்சியராக பணியை தொடங்கிய நிலையில் தருமபுரி ஆட்சியர், மகளிர் மேம்பாட்டுக் கழக இயக்குநர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர் 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்தின் போது அந்த பாதிப்புகளை சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக பணியாற்றி களத்தில் இறங்கி பலரது உயிர்களை காப்பாற்றினார்.

முசோரி
உத்தரகாண்ட் மாநில முசோரியில் உள்ள ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பேராசிரியராக உள்ள நிலையில் பணிமாற்றம் செய்யப்பட்டு பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு பணியில் 3 ஆண்டுகள் நிறைவடையாத நிலையில் அவர் மீண்டும் தமிழக அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடலூரில் வெள்ள பாதிப்புகள்
இதுகுறித்து அவர் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் 1996 ஆம் ஆண்டு நான் பணிக்கு வரும் போது கருணாநிதிதான் முதல்வர். 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே கடலூரில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் நான் அவரை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ரெயின்கோட்டுடன் போனேன். அங்கிருந்தவர்கள் அனுமதிக்கவில்லை.

திருநீர்மலை
ஆனால் கருணாநிதி என்னை அனுமதிக்குமாறு கூறினார். களத்தில் இறங்கி வேலை பார்ப்பவர்கள் அப்படியேதான் வருவார்கள். போய் உடையை மாற்றிக் கொண்டு வரமாட்டார்கள் என்றார். அடுத்தது 1997 ஆம் ஆண்டு செங்கல்பட்டு அருகே திருநீர்மலையில் ஒரு சட்டவிரோத குவாரியால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டிருந்தது. இதனால் அந்த இடத்திற்கு போய் 40 , 50 லாரிகளை பறிமுதல் செய்துவிட்டு அந்த குவாரிக்கு சீல் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.

பொதுமக்கள் முற்றுகை
அப்போது அந்த குவாரி ஆட்களும் பொதுமக்களும் குவாரியை திறக்கவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டினார்கள். எனது வாகனத்தை மறித்துக் கொண்டு முற்றுகையிட்டார்கள். நான் வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்றேன். அப்போது சட்டசபையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளம் பெண் அதிகாரியை குவாரி விவகாரத்தில் இறக்கிவிட்டீர்கள். அந்த பெண் அதிகாரிக்கு பாதுகாப்புக் கூட தரவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
Recommended Video

சப் ஆட்சியர்
அப்போது கருணாநிதி, அந்த சப் கலெக்டர் அமுதா நிறைய அதிரடிகளை செய்துள்ளார். அவர் சாதாரண அமுதா இல்லை அதிரடி அமுதா, மாலைக்குள் வேலையை முடித்துவிட்டு வந்துவிடுவார். நான் சட்டசபையில் அறிக்கையை தாக்கல் செய்கிறேன் என்றார். அவருக்கு என் மீது எத்தனை நம்பிக்கை இருந்தது? செங்கல்பட்டில் மணல் மாபியா, திருநீர்மலை குவாரி எல்லாம் இருக்கிறது என தெரிந்து நான் அவற்றை சிறப்பாக கையாளுவேன் என தெரிந்தே என்னை அந்த மாவட்டத்திற்கு சப் கலெக்டராக கருணாநிதி பணியமர்த்தினார்.

பணி கொடுக்கவில்லை
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைந்த போது எனக்கு அங்கு பணி கொடுக்கவில்லை. இருந்தாலும் நான் விடுப்பு எடுத்துக் கொண்டு அங்கு சென்றேன். அவர் உயிருடன் இருந்தவரை நான் அவரை காணாதது எனது துரதிருஷ்டம். உடனே அவரது இறுதிச் சடங்கை நடத்தும் பொறுப்பை எனக்கு ராமநாதபுரத்தில் கொடுத்தார்கள். அது போல் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் இறுதிச் சடங்கை ஏற்று நடத்தும் பொறுப்பும் எனக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த எனக்கு தமிழகத்தின் 3 ஆளுமைகளின் இறுதிச் சடங்குகளை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்தது என பாக்கியம்தான் என்றார் அமுதா ஐஏஎஸ்.
-
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications