தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம்.. 7 ஆண்டுகளுக்கு பிறகு வங்க கடலில் பாகங்கள் கண்டெடுப்பு
சென்னை:சென்னை தாம்பரத்தில் இருந்து 29 வீரர்களுடன் புறப்பட்டு சென்ற விமானம் வங்க கடலில் மாயமானது. இந்த விமானத்தின் நிலை என்ன ஆனதோ என்றே கண்டுபிடிக்க முடியாத நிலையில், தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு சேத பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்னையை அடுத்த தாம்பரத்தில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து அந்தமானில் உள்ள போர்ட்பிளேர் நகருக்கு விமானப்படைக்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் வாரந்தோறும் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இதில் ராணுவ வீரர்களும் அனுப்பி வைக்கப்பட்டு வரும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த 2016 ஆம் ஆண்டு, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என்.-32 ரக சரக்கு விமானம் ஒன்று தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கிளம்பிச் சென்றது. ஆனால் நடுவானில் அது வங்கக் கடலுக்கு மேலே செல்லும்போது மாயமாகி விட்டது. திடீரென விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானத்தின் நிலை என்ன விமானத்தில் பயணித்தவர்களின் கதி என்ன? என்பது குறித்து பெரும் அச்சம் ஏற்பட்டது.
29 பேர் பயணம்: அந்த விமானத்தில் 6 விமானிகள், 11 விமானப் படை வீரர்கள், 9 கடற்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், கடலோர காவல்படை வீரர் ஒருவர் என மொத்தம் 29 பேர் பயணம் செய்தனர். விமானம் கடல் பகுதியில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு தீவிர தேடும் பணி நடைபெற்றது. ஆனால், பல நாட்களாக விடிய விடிய சோதனை நடைபெற்றும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விமானத்தில் பயணம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி கடிதம் எழுதிய இந்திய விமானப்படை, மாயமான விமானத்தை கண்டறிவதில் தோல்வி அடைந்து விட்டோம். எங்களுக்கு வேறு வழியில்லை. விமானத்தில் பயணம் செய்தவர்களை இறந்தவர்களாக கருதுகிறோம்” என்று கூறியிருந்தது.
8 ஆண்டுகளுக்கு பிறகு விடை: சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது அப்போது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விமான விபத்து நடைபெற்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போது விமானத்தின் பாகங்கள் வங்க கடலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து 310 கி.மீட்டர் தொலைவில் கடலுக்குள் விமானத்தில் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால், வங்க கடலில் மாயமான விமானம் என்ன ஆனது என்ற விடை தெரியாமல் இருந்த இருந்த 7 அரை ஆண்டுகளுக்கு பிறகு கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது உறுதியாக தெரியவந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications