ஓணம் விடுமுறை.. வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம் போல செயல்படும்! பூங்கா நிர்வாகம் அறிவிப்பு
சென்னை: ஓணம் பண்டிகை காரணமாக வார விடுமுறையான இன்று, வழக்கம்போல வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாபலி மன்னனின் வருகையை கொண்டாடும் விதமாக கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை 10 நாட்கள் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின்போது அத்திப்பூ கோலமிட்டு கேரள மக்கள் மகாபலி மன்னனை வரவேற்கின்றனர். 10 நாட்களும் வித்தியாசமான பூக்கள் கொண்டு கோலமிடப்படும்.

அதேபோல ஆறு சுவைகளில் 64 வகையான உணவுகள் தயாரிக்கப்படும். இது ஓண சாத்யா என்று அழைக்கப்படுகிறது. ஓணம் பண்டிகையின் போதுதான் இதுபோன்ற உணவுகளை மாநிலம் முழுவதும் மக்கள் தயாரிப்பார்கள். அதேபோல பெண்கள் கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து ஓணம் பண்டிகையை கொண்டாடுவார்கள். கேரளா மட்டுமல்லாது மலையாள மொழி பேசும் மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று வழக்கம்போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சுமார் 1,00 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த பூங்காவை மாநில அரசும், வனத்துறையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. 160 ஆண்டுகள் பழமையான இந்த பூங்காவில் தற்போது இல்லாத உயிரினங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு ஆயிரக்கணக்கான உயிரினங்களை வண்டலூர் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
பட்டாம்பூச்சிகள் தொடங்கிய அரிய வகை பறவைகள், புலி, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி, நீர் யானை என ஏராளமான உயிரினங்கள் இங்கு இருக்கின்றன. இவற்றை பராமரிக்கவும், நோய்களிலிருந்து பாதுகாக்கவும் இரவும் பகலுமாக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். குழந்தைகள் மற்றும் மக்கள் மத்தியில் வன விலங்குகள் குறித்தும் சூழலியல் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த பூங்கா பெரிதும் உதவி புரிந்து வருகிறது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்போது 180 வகைகளை சேர்ந்த 2,500 உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவுக்கு என தனி வரலாறு உள்ளது. இந்த வரலாறே பூங்காவின் தனிச்சிறப்பு என்று கூறலாம். இந்த பூங்கா 1854ல் ஒரு சிறுத்தை மற்றும் புலியுடன் தொடங்கப்பட்டது. முதலில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள புறநகர் ரயில் நிலையத்திற்கு பின்னால் அமைந்திருந்தது. ஆனால் இப்பகுதியில் ஏற்பட்ட ஒலி மாசு காரணமாக 1975ல் இது வண்டலூருக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த பூங்காவின் உண்மையான வயது 168.
பூங்காவில் உள்ள உயிரினங்களை 24 மணி நேரமும் நேரலையில் மக்கள் கண்டுகளிக்கும் வசதியும் உள்ளது. பூங்காவில் புதியதாக 'நீர்வாழ் உயிரின காட்சி சாலை' ரூ.23 லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. பொதுவாக விழா நாட்கள், பண்டிகை தினங்களில் இந்த பூங்கா விடுப்பு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காரணமாக வார விடுப்பு தினமான இன்று வண்டலூர் பூங்கா வழக்கம் போல செயல்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications