95% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்... பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95% பேர் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 95% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை என்றும் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார். இதே போல், திருச்சியில் 90%, கடலூரில் 60% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.

இதற்கிடையே, "இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டோம்" என்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் கடிதம் பெறும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நேற்று 15 நாள் காவலில் அடைக்கப்பட்டதை அடுத்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1200 ஐ தாண்டி உள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications