நிலத்தை வைத்திருப்போர் தெரிஞ்சுக்கணும்.. அனாதீனம் நிலம் என்றால் என்ன? இதுக்கு பட்டா கிடைக்குமா? ஓஹோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதுமே வீடு, மனை வாங்கும்போது, நிலம் தொடர்பான பல்வேறு சட்ட ரீதியான விஷயங்களில் தெளிவாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும். காரணம் நீங்கள் வாங்கும் இடம் எங்குள்ளது? அது அமைந்துள்ள நிலம் யாருடையது என்பது தொடர்பான ஆவண ஆதாரங்களையும் கேட்டு பெற வேண்டியிருக்கிறது. அந்தவகையில், அனாதீனம் நிலம் என்றால் என்ன? என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

நம்முடைய நாட்டில் ஒரு சில நபர்களிடம் ஒட்டுமொத்த நில உரிமையும் குவிய கூடாது என்பதற்காகவே அமல்படுத்தப்பட்ட சட்டம்தான், நில உச்சவரம்பு சட்டம்.. இதன்படி, தனி நபர்கள், குடும்பங்களுக்கு கூட்டாகவும், அமைப்புகள் பெயரில் எவ்வளவு நிலம் இருக்க வேண்டும் என்ற வரம்பு உள்ளது..

patta land

நில உச்ச வரம்பு சட்டத்தின் அடிப்படையில் 30 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. 30 ஏக்கருக்கு மேல் யாராவது நிலம் வைத்திருந்தால் அது அரசாங்கத்திற்கு சேரும்.. இப்படி நிர்ணயிக்கப்பட்டதற்கு மேல், நிலம் இருந்தால் அது அரசுக்கு சொந்தமாகிவிடும் என்பதே இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம்.

உச்சவரம்பு: பொதுவாக, உச்சவரம்பு சட்டப்படி அரசுடைமையான நிலங்கள் அனைத்துமே வருவாய் துறையின் கட்டுப்பாட்டில்தான்.. ஒருவேளை இது போன்ற நிலங்களில் யாரும் உரிமை கோராவிட்டால், அந்த நிலங்களுக்கு "அனாதீனம்" என்ற வகைசெய்யப்பட்டு, வருவாய் துறையே பராமரிக்கும். சுருக்கமாக சொல்லப்போனால், என்பது அரசாங்கத்தின் கீழ் கையகப்படுத்தி இருக்கும் அல்லது அரசாங்கம் கைப்பற்றியிருக்கும் நிலங்களையே அனாதீனம் நிலம் என்கிறோம்..

இப்படியான நிலங்கள் பெரும்பாலும், நிலச்சீர்த்திருத்த சட்டப்படி/ரயத்துவாரி சட்டப்படி ஜமீன்தாரர்களிடமிருந்து, அரசால் கையகப்படுத்தப்பட்ட உபரி நிலங்களாக இருக்கும்.

பட்டா கிடையாது: அரசாங்கம் கைப்பற்றிய இந்த நிலங்களுக்கு பட்டா கிடையாது... அரசாங்க நிலம் என்று தெரியாமலேயே அதை வாங்கிவிட்டாலும்கூட, உங்களுக்கு அந்த நிலத்திற்கு பட்டா கிடைக்காது. அந்த நிலத்தை நீங்கள் விற்கவும் முடியாது. அதேபோல, நீங்கள் வைத்திருக்கும் நிலத்திற்கு பழைய பட்டா இருந்தாலும் அதை நீங்கள் விற்க கூடாது... இதை பதிவு செய்தாலும், அது மோசடி குற்றமாகிவிடும்..

மேலும், CMDA, DTCP போன்றவற்றின் அங்கீகாரம் இல்லாத மனைகளாக இந்த அனாதீனம் நிலங்கள் இருக்கும். அங்கீகாரம் இல்லாததால், இந்த நிலங்களை தனி நபர் யாராலும் உரிமை கொண்டாடவும் முடியாது.. எனவே, நிலம் வாங்கும்போது அந்த நிலத்தை பற்றி முழுவதுமாக விசாரித்த பிறகே வாங்க வேண்டும்.

நீதிமன்றம்: ஒருவேளை, தனியாருக்கு சொந்தமான நிலம் கணினியில் தவறுதலாக அனாதீன நிலமாக வகைப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர் உரிய உரிமை ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே அனாதீனம் ரத்து செய்யப்படும். அதேபோல, அனாதீன நிலத்திற்கு யாருக்காவது பட்டா கிடைத்திருக்கிறதென்றால், அதை வைத்து நீதிமன்றத்தை நாடி, பட்டா பெற முயற்சிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+