பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் எடுத்தால் ரூ.10 ஆயிரம் பரிசு.. அன்பில் மகேஷ் அறிவிப்பு!
சென்னை: பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். 6 மாதத்தில் எங்களுக்கு பொதுத்தேர்தலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களான உங்களுக்கும் பொதுத்தேர்வும் வந்துவிடும் என்று கூறிய அன்பில் மகேஷ், நீங்களும் வெற்றி பெற வேண்டும், நாங்களும் வெற்றிபெற வேண்டும் என்று கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,715 புதிய ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதேபோல் ரூ.277 கோடி மதிப்பிலான சாரண சாரணியர் தலைமை அலுவலகக் கட்டடம், 243 பள்ளிகளில் கட்டப்பட உள்ள வகுப்பாறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், குடிநீர் வசதிகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட இதர கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதேபோல் ரூ.94 கோடியில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டிடங்கள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அன்பில் மகேஷ் பேசுகையில், பள்ளிக் கல்வித்துறை கட்டடங்கள் சாதியை ஒழிக்கும் கட்டடங்களாக இருந்து வருகின்றன. 2,715 பட்டதாரி ஆசிரியர்கள் எங்களின் பள்ளிக் கல்வித்துறை குடும்பத்தில் இணைந்துள்ளனர். கல்வி, சுகாதாரம் ஆகிய இரண்டையும் இரு கண்களாக கருதி முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.
அதேபோல் ஆசிரியர்களே 6 மாதத்தில் உங்களுக்கு பொதுத் தேர்வு வந்துவிடும்.. எங்களுக்கு பொதுத் தேர்தல் வந்துவிடும்.. நாங்களும் வெற்றி பெற வேண்டும்.. நாங்களும் வெற்றி பெற வேண்டும்.. அரசு விழாவில் அரசியலா என்று நினைக்க வேண்டாம்.. நான் அரசியல் பேசவில்லை.. அறிவு சார்ந்த விஷயத்தை கொண்டு செல்வதற்காகவே இங்கு பேசுகிறேன்.
அதுமட்டுமல்லாமல் பொதுத் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண் பெறும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். அன்பு கரங்கள் மூலமாக பல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுகின்றன. பள்ளிக் கல்வித்துறை தங்களது இலக்கை கடந்து உழைத்து வருகிறது என்றும் தெரிவித்தார். மேலும், கடந்த பொதுத்தேர்வில் தமிழில் முழு மதிப்பெண் பெற்ற 142 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications