ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே.. விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது- அன்பில் மகேஷ்
சென்னை: ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கின்றன. இதையொட்டி கடந்த சில தினங்களாக பள்ளிகள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அச்சம் வேண்டாம்
இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் அச்சப்பட தேவையில்லை. நாளை முதல் 9,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பள்ளி இயங்கும். ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒரு கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும்.

விளையாட்டு நேரம்
ஒரு நாளில் 5 வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். மாணவர்களுக்கு விளையாட்டு நேரம் ஒதுக்கப்படாது. தொடக்கம் முதலே பாடம் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாரான பிறகு வகுப்பெடுக்க வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பு
மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்யும். காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பள்ளி இயங்கும். வாரத்தில் 6 நாட்களும் பள்ளி இயங்கும். பள்ளி மாணவர்கள் நிச்சயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வர வேண்டும். பள்ளியிலும் கிருமிநாசினி, மாஸ்க்குகள் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் தடுப்பூசி போட்ட பின்னரே பள்ளிக்கு வர வேண்டும்.

பள்ளிக்கு வர கட்டாயமில்லை
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை. தற்போதைய சூழலில் மாணவர்களுக்கு வெறும் அடிப்படை டெக்னிக்குகளை மட்டுமே சொல்லித் தருமாறு கூறியுள்ளோம். இதனால் அவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல உதவியாக இருக்கும். ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மாணவர்களை பள்ளி திறந்த நாளே படி படி என சொல்வது அவர்களுக்கு மேலும் வெறுப்பையும் மன அழுத்தத்தையும் தரும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்
பள்ளிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி இயங்குவது கட்டாயமில்லை. தற்போது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்கவில்லை. எனவே அந்த வகுப்பறைகளை 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயன்படுத்தலாம். அது போல் கல்வி தொலைகாட்சி வழக்கம் போல் இயங்கும். இதை தொடங்கினால் அது நிறுத்தப்படும். அது தொடங்கினால் இது நிறுத்தப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
Recommended Video

கல்லூரிகளும் திறப்பு
தமிழகத்தில் நாளை முதல் கல்லூரிகளும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்றைய தினம் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் சீருடையுடன் வரும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்றும் அது போல் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பேருந்து பயணத்திற்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்கிறார்கள். என்னதான் வீடியோகாலில் பார்த்துக் கொண்டாலும் தங்கள் நண்பர்களை நேரில் அதுவும் பள்ளிச் சீருடையில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு அதிகமாகவே உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications