நடக்காததை நடத்தி காட்டிய பாமக..அனைத்து கட்சிகளையும் ஒன்று சேர்த்த அன்புமணி! அரசியலில் அரிதான நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பாமக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி மற்றும் சமுதாய அமைப்புகளின் கலந்தாய்வு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு அதிமுக, காங்கிரஸ், தவெக, பாஜ, நாதக, தேமுதிக, அமமுக, தவாக உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றதுடன், நேரில் பங்கேற்காத திமுக உள்ளிட்ட சில கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் அரிதினும் அரிதானது இதுபோன்ற நிகழ்வு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

சென்னை தி.நகரில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். மாநிலத்தில் சமூகநீதி கொள்கைகளை வலுப்படுத்துவதற்கும், பல்வேறு சமூகங்களின் உண்மையான மக்கள் தொகை விவரங்களை அறிந்து அரசுத் திட்டங்களை வடிவமைப்பதற்கும் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, காங்கிரஸ், தவெக, பாஜக, நாம் தமிழர் கட்சி, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 42 கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anbumani Ramadoss PMK Caste Census

அன்புமணி ராமதாஸ்

கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சங்களில் ஒன்று, மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல், மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தமிழ்நாடு அரசே தனியாக சமூகநீதி அடிப்படையிலான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதாகும். இதற்காக, பீகார் மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிடப்பட்டது. குறிப்பாக, 2008ஆம் ஆண்டின் மத்திய புள்ளிவிவரங்கள் சேகரிப்புச் சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, தமிழகத்திலும் உடனடியாக கணக்கெடுப்பு பணிகளை தொடங்க வேண்டும் என்று கூட்டத்தில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு

மேலும், தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அல்லது தனித்துவமான நிபுணர் குழுவை அமைத்து, கணக்கெடுப்புக்கான பணிகளை தாமதமின்றி தொடங்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் கிடைக்கும் தரவுகள் எதிர்கால இடஒதுக்கீடு கொள்கைகள், கல்வி வாய்ப்புகள், வேலைவாய்ப்பு திட்டங்கள் மற்றும் சமூகநீதி சார்ந்த முடிவுகளுக்கு அடிப்படையாக அமையும் என்றும் கூட்டத்தில் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து கட்சிகள்

இந்தக் கூட்டத்தின் மற்றொரு முக்கிய முடிவாக, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு கூட்டுக்குழுவை அமைத்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூட்டத்தில் நேரடியாக பங்கேற்காத திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. குறிப்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக அன்புமணி ராமதாஸை தொடர்புகொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு திமுக முழுமையான ஆதரவை வழங்கும் என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அரசியல்

அதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே அரிதாகக் காணப்படும் ஒரு கருத்தொற்றுமை உருவாகி வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் தற்போது மீண்டும் அரசியல் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

காவிரி விவகாரம்

குறிப்பாக, பல்வேறு கட்சிகள் ஒரே மேடையில் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு அரிதிலும் அரிதானது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இதற்கு முன்னர் ஆளும் கட்சி அல்லது எதிர்க்கட்சி ஒரு கூட்டத்தைக் கூட்டினால் அதில் எதிர் முகாம் கலந்து கொள்ளாது. காவிரி விவகாரம் உள்ளிட்ட ஒரு சில நிகழ்வுகளில் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது.

அரசியல் ஒற்றுமை

ஆனால் அது போன்ற அனைத்து கட்சி கூட்டங்களை ஆளுங்க கட்சியோ அல்லது எதிர்க்கட்சியதான் கூட்டி இருக்கும். ஆனால் ஆளும் கட்சியாகவும் இல்லாமல் எதிர்க்கட்சியாகவும் இல்லாமல் பொதுவான ஒரு கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி இது போன்ற ஒரு நிகழ்வை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் குதிரை பேரத்தில் ஈடுபட்டால் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து பொது வேட்பாளரை நிறுத்துவோம் என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்ததும் கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஆளுங்கட்சி தொடங்கி அனைத்து கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் பயணிக்க வைத்திருக்கிறார் அன்புமணி ராமதாஸ் என்கின்றனர் பாட்டாளி மக்கள் கட்சியினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+