Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுங்க வைத்த ஆந்திர ரயில் விபத்து.. மோடி, ஜெகன் மோகன் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ் தனித்தனியே நிவாரணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆந்திராவில் 2 ரயில்கள் மோதி 8 பேர் பலியாகி உள்ளனர். 18 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ள நிலையில் ஆந்திர மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசா மாநிலம் ராயகடாவுக்கு இன்று பயணிகள் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி அருகே சென்றது.

Andhra Train Accident: PM Modi, Ashwini Vaishnaw, and Andhra CM annouces Ex-gratia

அப்போது திடீரென்று பிரேக்கில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அந்த ரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசா நோக்கி இன்னொரு பயணிகள் ரயில் வந்தது.

இந்த ரயில் தண்டவாளத்தில் நின்ற விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் மீது மோதியது. இதில் 3 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் ஏராளமான பயணிகள் காயமடைந்தனர். பயணிகள், ரயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள், பேரிடர் மீட்பு படையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்பு பணியை தொடங்கினர். 8 பேர் பலியான நிலையில் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ளவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ரயில்வே விபத்தில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆந்திர மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ரயில்வே அமைச்சகம் சார்பில் தனித்தனியே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு சார்பில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நிவாரணம் அறிவித்துள்ளார். அதில் ரயில் விபத்தில் பலியான ஆந்திராவை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சமும், பிற மாநிலத்தை சேர்ந்தவர் பலியாகி இருந்தால் ரூ.2 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

அதேபோல் மத்திய அரசு சார்பில் பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளதாக அவரது அலுவலக எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மத்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நிவாரணம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், படுகாயம் அடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+