அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!!
சென்னை: ஆன் லைன் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த நடைமுறை விதிகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 30% மதிப்பெண் தியரிகளுக்கும், 50% மதிப்பெண் சிஜிபிஏவுக்கும், 20% இன்டர்னல் மதிப்பெண் ஆகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தேர்வு ஏ, பி என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகளும், 25 இரண்டு மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும்.

லாக் இன்
தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கொடுக்கப்பட்டு இருக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக லாக் இன் செய்து கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குப் பின்னர் லாக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாதிரி தேர்வு
acoe.annauniv.edu இணையத்தில் இருந்து மாணவர்கள் தங்களது பாஸ்வேர்டை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் இரண்டு முறையிலான அதாவது மாதிரி தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கும் இருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் அவர்களது இ மெயில் வாயிலாக பகிரப்படும்.

கல்லூரி ஐடி
மாணவர்கள் தங்களது புகைப்படத்தையும், ஏதாவது அரசு அடையாள அட்டையையும் சமர்பிக்க வேண்டும். கல்லூரி அடையாள அட்டையும் அவசியம் பகிர வேண்டும்.

மவுஸ் அனுமதி
தேர்வின்போது மாணவர்கள் கீ போர்டு பயன்படுத்த அனுமதிக்கபட மாட்டார்கள். மவுஸ் துணையுடன் பதில்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மைக்ரோ போன் மற்றும் கேமரா ஆன் செய்ய வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் முறையில் மாணவர்களின் முகம், கண் மற்றும் அவர்களது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று தெரிவிக்கபப்த்டுள்ளது.

மின் துண்டிப்பு
மின் துண்டிப்பு, நெட்வொர்க் சிக்கல் இருந்தால், மீண்டும் மூன்று நிமிடங்களுக்குள் இணைந்து கொள்ளலாம். அதேசமயம், கம்ப்யூட்டர் செயலிழப்புக்கு பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது. இந்த மாதிரியான சந்தர்பங்களுக்கு கூடுதலாக மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். திரையில் உள்ள ரிசோர்ஸ் பட்டன் மூலம் கால்குலேட்டரை அணுகலாம். ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது ஆடியோ பதிவுகளை எடுப்பது முறைகேடாக கருதப்படும். என்றும் எச்சரித்துள்ளது.

29 ஆம் தேதி வரை
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
Personality Test: படத்துல 3 ரூம் இருக்கு! எந்த அறை பிடிச்சிருக்குனு சொல்லுங்கள்! சர்பிரைஸ்! -
சென்னையின் மிக முக்கிய இடத்தை.. அப்படியே செதுக்க போறாங்க.. களமிறக்கப்பட்ட இரும்பு ராட்சசன்! -
தென் மாவட்ட பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே! எழும்பூரில் இருந்து இந்த ரயில்கள் புறப்படாது -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
ரூ.45 லட்சம் நூதன மோசடி.. சென்னை தம்பதி மீது வழக்கு பதிவு! -
கோவை டூ தென்காசி வரை.. அடுத்த 3 மணி நேரம் பிச்சு உதறப்போகுது கனமழை.. உஷார் மக்களே! -
இடி, மின்னலுடன் வெளுக்க போகுது மழை! இன்று 4 மாவட்டங்களில் கனமழை அலர்ட்! கோடை வெயிலுக்கு ஜில் அப்டேட் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications