அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!!
சென்னை: ஆன் லைன் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த நடைமுறை விதிகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 30% மதிப்பெண் தியரிகளுக்கும், 50% மதிப்பெண் சிஜிபிஏவுக்கும், 20% இன்டர்னல் மதிப்பெண் ஆகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தேர்வு ஏ, பி என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகளும், 25 இரண்டு மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும்.

லாக் இன்
தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கொடுக்கப்பட்டு இருக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக லாக் இன் செய்து கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குப் பின்னர் லாக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாதிரி தேர்வு
acoe.annauniv.edu இணையத்தில் இருந்து மாணவர்கள் தங்களது பாஸ்வேர்டை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் இரண்டு முறையிலான அதாவது மாதிரி தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கும் இருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் அவர்களது இ மெயில் வாயிலாக பகிரப்படும்.

கல்லூரி ஐடி
மாணவர்கள் தங்களது புகைப்படத்தையும், ஏதாவது அரசு அடையாள அட்டையையும் சமர்பிக்க வேண்டும். கல்லூரி அடையாள அட்டையும் அவசியம் பகிர வேண்டும்.

மவுஸ் அனுமதி
தேர்வின்போது மாணவர்கள் கீ போர்டு பயன்படுத்த அனுமதிக்கபட மாட்டார்கள். மவுஸ் துணையுடன் பதில்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மைக்ரோ போன் மற்றும் கேமரா ஆன் செய்ய வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்
ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் முறையில் மாணவர்களின் முகம், கண் மற்றும் அவர்களது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று தெரிவிக்கபப்த்டுள்ளது.

மின் துண்டிப்பு
மின் துண்டிப்பு, நெட்வொர்க் சிக்கல் இருந்தால், மீண்டும் மூன்று நிமிடங்களுக்குள் இணைந்து கொள்ளலாம். அதேசமயம், கம்ப்யூட்டர் செயலிழப்புக்கு பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது. இந்த மாதிரியான சந்தர்பங்களுக்கு கூடுதலாக மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். திரையில் உள்ள ரிசோர்ஸ் பட்டன் மூலம் கால்குலேட்டரை அணுகலாம். ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது ஆடியோ பதிவுகளை எடுப்பது முறைகேடாக கருதப்படும். என்றும் எச்சரித்துள்ளது.

29 ஆம் தேதி வரை
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்!












Click it and Unblock the Notifications