கனமழை எதிரொலி.. நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
சென்னை: தொடர்ந்து கனமழை பெய்த காரணமாக நாளை(திங்கள்கிழமை) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை தொடங்கி இரவு வரை தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்தது.
இதையடுத்து நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், 4 வளாகங்களின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் வெளியிடப்படும் என பதிவாளர் கருணாமூர்த்தி அறிவித்துள்ளார். முன்னதாக நாளை (திங்கள்கிழமை) நடைபெறுவதாக இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.