காட்டுமிராண்டி தனமான குற்றம்.. ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக்கூடாது.. காவல்துறை வக்கீல் வாதம்
சென்னை: ஒரு பல்கலைக்கழக வளாகத்திற்கு நுழைந்து காட்டுமிராண்டி தனமான குற்றத்தை ஞானசேகரன் புரிந்துள்ளார். இது அரிதிலும் அரிதான வழக்கு. ஆகையால் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், அவருக்கு இரக்கம் காட்டக் கூடாது என்று காவல்துறை வழக்கறிஞர் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஞானசேகரன் குற்றவாளி என்று சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஏப்ரல் 23ஆம் தேதி முதல் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வந்தன.

குற்றவாளி ஞானசேகரன்
பாதிக்கப்பட்ட மாணவி உட்பட மொத்தமாக 29 சாட்சியங்களிடம் விசாரணை செய்யப்பட்டன. அதேபோல் சிறப்பு புலனாய்வுக்குழு தரப்பில் 100க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் என 100 பக்க அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதன்பின் நீதிபதி ராஜலட்சுமி, குற்றம்சாட்டப்பட்டுள்ள ஞானசேகர் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்துள்ளார்.
கதறிய ஞானசேகரன்
இதனால் நீதிமன்றத்திலேயே கதறிய ஞானசேகரன், எனக்கு அப்பா இல்லை.. அம்மா மட்டுமே இருக்காங்க.. அவர்களுக்கும் உடல்நிலை சரியில்லை.. சகோதரி இருக்காங்க.. 8வது படிக்கும் மகளை பார்த்து கொள்ள வேண்டும்.. இதனால் தொழில் பாதிக்கும்.. வங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது.. கடன்கள் உள்ளன. அதனால் குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கதறினார்.
காட்டுமிராண்டித்தனமான குற்றம்
இதன்பின் குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி அறிவித்தார். இதனிடையே காவல்துறை வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தரப்பில் குற்றவாளிக்கு இரக்கம் காட்டக் கூடாது என்று வாதம் வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று காட்டுமிராண்டி தனமான குற்றத்தை புரிந்துள்ளார் ஞானசேகரன்.
இரக்கம் காட்டக் கூடாது
இதனால் அரிதினும் அரிதான வழக்கு என்பதால் அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஞானசேகரனுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 11 பிரிவுகளிலும் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications