முதல்வர் விஜய்யின் 3ஆவது செயலாளராக அண்ணாதுரை ஐஏஎஸ் நியமனம்! தமிழக அரசு உத்தரவு
சென்னை: முதல்வர் விஜய்யின் மூன்றாவது செயலாளராக அண்ணாதுரை ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அது போல் இணை செயலாளராக விஷ்ணு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
முதல்வராக விஜய் பதவியேற்ற நிலையில் முதல்வரின் தனிச் செயலாளர் 1, 2 ஆகிய இருபதவிகளுக்கான அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நியமிக்கப்பட்டனர். தனிச் செயலாளர் 1 அல்லது முதன்மை செயலாளராக செந்தில் குமார் நியமிக்கப்பட்டார். இவர் மருத்துவத் துறை செயலாளராக இருந்தவர்.

அது போல் முதல்வரின் தனிச் செயலாளர் 2-வாக ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆதிதிராவிடநலத் துறை செயலாளராக இருந்தவர்.
பொதுவாக முதல்வருக்கு 1, 2, 3 என 3 தனிச் செயலாளர்கள் நியமிக்கப்படுவார்கள். தற்போது இரு செயலாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் செயலாளர் - 3 பிறகு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.
முதல்வராக ஸ்டாலின் இருந்த போது முதல்வரின் தனிச் செயலாளராக உதயசந்திரன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். அதன் பிறகு செயலாளர் -2 ஆக சண்முகமும், செயலாளர் - 3 ஆக அனு ஜார்ஜும் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
இதில் 2024 ஆம் ஆண்டு உதயசந்திரன் நிதித் துறைக்கு மாற்றப்பட்டதால் அவருக்கு பதிலாக உமாநாத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார்.

முதலவரின் தனிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படும். இந்த 3 தனிச் செயலாளர்களுடன் ஒரு இணைச் செயலாளரும் நியமிக்கப்படுவார்.
அந்த வகையில் உமாநாத்திற்கு பதிலாக செந்தில் குமாரும், சண்முகத்திற்கு பதிலாக லட்சுமி பிரியாவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்கு பதவியில் இருஇவர்களுக்கான துறைகள் பின்னர் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் இன்று ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் முதல்வரின் 3ஆவது செயலாளராக அண்ணாதுரையும் இணை செயலாளராக விஷ்ணுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் தமிழக அரசின் நிதி நிர்வாகத்திற்கு சித்திக் ஐஏஎஸ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications