"ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து".. ஆதவை விமர்சித்த அண்ணாமலை
சென்னை: ஆதவ் அர்ஜுனாவை பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து" என்ற பழைய தமிழ் காமெடியை நினைவூட்டி, உதயநிதிக்கு ஆதரவாக அமைச்சர் ஆதவ் கருத்த தெரிவித்த வீடியோவை வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதள பதிவில் அண்ணாமலை கூறியுள்ளதாவது: ஒரு கட்டத்தில் ஆதவ் அர்ஜுனா தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதையே மறந்துவிட்டாரோ என்று தோன்றுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தமிழ் காமெடி ஒன்றை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து என்பது போல, ஒருபுறம் ஆதவ் தான் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதையே மறந்துவிட்டார் போலத் தோன்றுகிறது. எதிர்க்கட்சித் தலவர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுகவினரே இவ்வளவு தீவிரமாக ஆதரவு தெரிவிக்காத நிலையில், ஆதவ் அர்ஜுனா மிகைப்படுத்தி பாதுகாக்க முயற்சிக்கிறார்.
அதேபோல், "வடஇந்தியாவில் சனாதன தர்மம் இந்து மதத்துடன் இணைத்து பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அதையே சமத்துவமின்மை என்று மறுவரையறை செய்யப்படுவது ஏன்?" என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பியுள்ளார்.
மிகவும் குழப்பமாக இருக்கிறது ப்ரோ. திமுக எம்எல்ஏ உதயநிதி தெரிவித்த மிகவும் பொறுப்பற்ற கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிப்பதற்குப் பதிலாக, ஆதவ் அவற்றை நியாயப்படுத்தி பேசியுள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications