பாஜக அணிக்கு விழுந்த அடி.. விக்கிரவாண்டி ரிசல்ட் பற்றி அண்ணாமலை சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் தமிழக மக்களின் மனநிலையை எதிரொலிப்பது இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வியுற்ற நிலையில் அண்ணாமலை இவ்வாறு கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி அன்புமணி தோல்வியைத் தழுவி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.

அண்ணாமலை பேட்டி: இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இடைத்தேர்தல் முடிவு குறித்துப் பேசிய அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும், அதுகுறித்து ஆராய்ந்துவிட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகிறேன். நாளை அல்லது நாளை மறுநாள் இதுகுறித்து தீர்க்கமாகப் பேசுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இடைத்தேர்தலின் முடிவுகள் எப்போதும் ஓர் ஆச்சரியம்தான்.
இடைத்தேர்தலில் தொடர்ந்து ஆளுங்கட்சிதான் ஜெயிக்கிறது. அதன்பிறகு, நடந்த தேர்தல்களில் முழுமையாக முடிவுகள் மாறியிருக்கிறது. இதை பலமுறை பார்த்திருக்கிறோம். இந்த முறையும் அப்படித்தான் முடிவுகள் வந்திருக்கிறது. குறிப்பாக இடைத்தேர்தலில், நிறைய அமைச்சர்கள் ஒவ்வொரு இடத்திலும் சென்று வேலை பார்க்கின்றனர். அத்துமீறல்கள், முறைகேடுகள் எல்லாம் இப்போது இடைத்தேர்தல்களில் சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றன.
மக்களின் மனநிலை அல்ல: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் போல இந்த தேர்தல் நடக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டோம். ஆனால், பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன. இடைத்தேர்தலின் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு. காரணம் இதற்கு முன்பும் அதுபோல இருந்தது இல்லை. இப்போதும் அப்படி இருக்கப்போவதில்லை.
எனினும், மக்களின் முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து கடுமையாக களப்பணி ஆற்றினர். வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அரசின் அதிகார பலம், பண பலம், படை பலம் அனைத்தையும் தாண்டி இத்தனை மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதுவும் ஒரு சாதனைதான்.
2026ல் திமுக ஆட்சியை இழக்கும்: இதற்குமுன்பு தமிழகத்தில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கட்சிகள் பொதுத் தேர்தலில் ஆட்சியை இழந்துள்ளன. எனவே, இந்த தேர்தல் முடிவை முன்னோட்டமாக எடுத்துக் கொண்டால், நிச்சயமாக இந்த ஆட்சி 2026 தேர்தலில் ஆட்சியை இழக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? 26 தொகுதிகளுக்கு வெளியான உத்தேச பட்டியல்! குஷ்பு, அண்ணாமலை மிஸ்ஸிங்! -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
அண்ணாமலைக்குப் போகிறதா கோவை வடக்கு.. சட்டென வானதி சீனிவாசன் கொடுத்த ரியாக்ஷன் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு












Click it and Unblock the Notifications