Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது.. யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்: அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்யக் கூடாது, இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக்கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும், இஸ்லாமிய அமைப்புகளும் தொடர்ந்து இதனை வலியுறுத்தி வருகின்றன. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்தால், திமுக போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் சீமான் அண்மையில் கூறி இருந்தார்.

Annamalai urges cm stalin Muslim prisoners who are in jail should not be released

இஸ்லாமிய சிறைக்கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 10ஆம் தேதி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் பேசினர். அப்போது தண்டனை காலத்தை கடந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து பேசுகையில், முதல்கட்டமாக 49 ஆயுள் தண்டனை சிறைவாசிகளின் கோப்புகள் ஆகஸ்ட் 24 அன்று ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 20 சிறைவாசிகள் இஸ்லாமிய சிறைவாசிகள் உள்ளதாகவும் தெரிவித்தார். ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டவுடன், அனைத்து சிறைவாசிகளும் விடுதலை செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கோயம்புத்தூர் போன்ற அமைதியான நகரத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் 1998ஆம் ஆண்டு வெடிகுண்டு வெடித்ததில் 58 பேர் உயிரிழந்தனர். 200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் நிறுத்திவைத்தது. மேலும் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு கொடூரமான செயல் என்று மீண்டும் வலியுறுத்தியது.

இந்த நிலையில் இதையெல்லாம் மீறி, தமிழக சட்டசபையில், கோவை குண்டுவெடிப்பு மற்றும் பிற கொடூரமான செயல்களில் ஈடுபட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பயங்கரவாதிகளை விடுதலை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. சிறுபான்மையினரை திருப்தி செய்ய இந்த விவாதம் நடத்தப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவத்தால் காயம் இன்னும் ஆறாத நிலையில், கடந்த அக்டோபரில், மீண்டும் கோவையை உலுக்கிய தற்கொலை குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம், இந்த பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட 13 தீவிரவாதிகளை என்ஐஏ கைது செய்தது.

இன்னும் தீவிரவாதம் ஓயவில்லை. கோயம்புத்தூர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிர இஸ்லாமிய அடிப்படைவாதிகளை சிறையில் இருந்து விடுவிக்கும் முயற்சியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறுத்துவார் என்று எதிர்பார்க்கிறோம்" என அண்ணாமலை அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வதை, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை தீவிரவாதத்துக்கு வண்ணம் கிடையாது. தீவிரவாதத்தை ஒரு சமுதாயத்துக்குள், சாதிக்குள், மதத்துக்குள் அடைக்க வேண்டாம். கோவை குண்டுவெடிப்பை தீவிரவாதச் செயலாகவே பார்க்கிறேன். அவர்களை வெளியில் விடக் கூடாது.

தீவிரவாதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தீவிரவாதிகள்தான். இன்னும் அங்கு தீவிரவாதம் ஒழியவில்லை, அப்படியே இருக்கிறது. எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளா என்றால் அது கிடையாது. மேலும், இஸ்லாமியர்கள் என்பதால் அவர்களை வெளியில் விடக்கூடாது என்று நான் கூறவில்லை. தீவிரவாதிகள் என்பதால் அவர்களை வெளியில் விடக் கூடாது என்கிறேன்" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+