அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அண்ணாமலை தனது 'வி த லீடர்ஸ்' என்கிற அமைப்பை பலப்படுத்தி வருகிறார். பாஜகவின் பல முக்கிய புள்ளிகள் இந்த அமைப்பில் இணைந்திருக்கின்றனர். இப்படி இருக்கையில், பாஜகவிலிருந்து விலகிய அக்கட்சியின் முக்கிய நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி, லீடர்ஸ் அமைப்பில் இணைந்திருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், எதிர் காலத்தில் அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி என்று கூறியிருக்கிறார்.

அவர் பேசியதாவது, "தமிழிசை சௌந்தரராஜன் மாநில தலைவராக இருந்த காலத்தில் தமிழகத்தில் பாஜகவின் ஓட்டு சதவிகிதம் வெறும் 3% தான். அவங்க எலக்சன்ல நின்னாங்க.. தோத்தாங்க! ஆனா, அவங்களுக்கு கௌரவப்படுத்தி, உழைப்பை அங்கீகரித்து கவர்னர் பதவி கொடுத்தாங்க.

Annamalai

பிறகு வந்த எல்.முருகன் மாநில தலைவரா இருந்தாரு. அவரும் எலக்சன் நின்னாரு தோத்தாரு. ஆனால் அவருடைய உழைப்பை அங்கீகரித்து ராஜ்யசபா எம்பி மற்றும் மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

பின்னர் அண்ணாமலை மாநில தலைவரா இருந்தாரு. இந்த பொறுப்புக்கு அவர் வந்தபோது கட்சியின் வாக்கு சதவிகிதம் வெறும் 3% தான். ஆனால் அண்ணாமலை உழைத்து கட்சியின் வாக்கு சதவிகிதத்தை 12% ஆக கொண்டு வந்தார். ஆனா அலையன்ஸ்காக.. ஓவர் நைட்ல.. ஒன் ஹவர்ல.. ஒரு டிசிஷன் எடுத்து அண்ணாமலையை நீக்கியது கட்சி. கட்சியின் வாக்கு வங்கி 12% ஆக உயர்ந்த பின்னரும், வெறும் 27 சீட்டை பாஜக வாங்கியது. இப்படியாக கட்சி இன்று மாறியிருப்பது வேதனையாக இருக்கிறது. 12% கொண்டு வந்த அண்ணாமலைக்கு நீங்கள் அங்கீகாரம் கொடுக்கல. எதுக்காக கொடுக்கல? தமிழ்நாடு இருந்து ஒரு இளம் தலைவர் வந்துவிட கூடாது என சிலர் நினைப்பதால்தான் என்று நான் கருதுகிறேன்.

பல விஷயங்களில் நாம் திமுகவைப் போல கிடையாது என்று கூறுகிறோம். ஆனால், தமிழக பாஜகவுக்கும் திமுகவுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? திமுக குடும்ப ஆட்சி என்று நாம் விமர்சிக்கிறோம். அதேபோல தமிழக பாஜக 4-5 பேரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. தோற்றாலும் பரவாயில்லை. ஆனால், அந்த 4-5 பேர் தான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சொந்த காசு போட்டு கட்சியின் இயக்கங்களுக்கு, நிகழ்ச்சிகளுக்கு, பிரதமர் வருகிறார் என்றாலும் அந்த நிகழ்ச்சிக்கு வந்து நிற்கிறார்களே.. அந்த அடிமட்ட தொண்டருக்கு இந்த கட்சி என்ன செய்திருக்கிறது?

குறிப்பாக தேர்தலில் தொடர்ந்து தோல்வி அடைபவர்களுக்கு.. எதற்காக சீட்டு ஒதுக்கப்படுகிறது, அவர்கள் தேர்தலில் மீண்டும் மீண்டும் போட்டியிடுவதன் மூலம் எங்கோ பெருத்த பயனடைகிறார்கள்.

இந்தக் கட்சியின் தலைமைக்கு தமிழர்களின் பல்ஸ் தெரியவில்லை. அதை பிடிக்க தவறிவிட்டது. நான் பிறப்பால் சலுங்கனாக இருந்தாலும் நான் தமிழன் தான். அதற்காக நான் பெருமை அடைகிறேன். எதிர்காலத்தில் விஜய்க்கும் அண்ணாமலைக்கும் தான் போட்டிய இருக்கும்" என்று கூறியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+