Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திக்கு தடை விதிக்கும் மசோதா.. முற்றிலும் வதந்தியே.. தமிழக உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி என்று தமிழக உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டசபைச் செயலர் கூறியதாகவும், வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் கரூர் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையில் தீவிர விவாதம் நடைபெற்றது. இதனிடையே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நேற்றிரவு ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

Anti Hindi Bill Fact Check Tamilnadu Assembly CM Stalin

அதில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்த மசோதா காரணமாக இந்தி விளம்பர பலகைகள், இந்தி விளம்பரங்கள், அரசு அலுவலகங்களில் இந்தி பெயர்கள், இந்தி விலாசங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்ய முயலும் என்று கூறப்பட்டன. சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ள நிலையில், திமுக மீண்டும் இந்தியை கையில் எடுத்துள்ளதாக சில விமர்சனங்கள் வந்தன.

இந்த தகவல் வெளியாகிய நிலையில் உடனடியாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என்றும் விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் மொழியை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் சட்டசபையில் இந்தி எதிர்ப்பு மசோதா எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு மசோதா தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.

இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை" என்று சட்டசபைச் செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைக் கூட்டத் தொடரில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக எந்த வகையான மசோதாவும் நிறைவேற்றப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+