இந்திக்கு தடை விதிக்கும் மசோதா.. முற்றிலும் வதந்தியே.. தமிழக உண்மை சரிபார்ப்பகம் விளக்கம்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி என்று தமிழக உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என்று சட்டசபைச் செயலர் கூறியதாகவும், வதந்தியை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையின் 2ஆம் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய நாளில் கரூர் விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக இடையில் தீவிர விவாதம் நடைபெற்றது. இதனிடையே சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் இந்தி எதிர்ப்பு மசோதாவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. இதுதொடர்பாக நேற்றிரவு ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் சொல்லப்பட்டது.

அதில் வழக்கறிஞர் என்ஆர் இளங்கோ பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்த மசோதா காரணமாக இந்தி விளம்பர பலகைகள், இந்தி விளம்பரங்கள், அரசு அலுவலகங்களில் இந்தி பெயர்கள், இந்தி விலாசங்கள் உள்ளிட்டவற்றை தடை செய்ய முயலும் என்று கூறப்பட்டன. சட்டசபைத் தேர்தலுக்கு 6 மாதங்கள் உள்ள நிலையில், திமுக மீண்டும் இந்தியை கையில் எடுத்துள்ளதாக சில விமர்சனங்கள் வந்தன.
இந்த தகவல் வெளியாகிய நிலையில் உடனடியாக பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், இந்த நடவடிக்கை முட்டாள்தனமானது மற்றும் அபத்தமானது என்றும் விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் மொழியை அரசியல் கருவியாக பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தி இருந்தார். ஆனால் சட்டசபையில் இந்தி எதிர்ப்பு மசோதா எதுவும் நிறைவேற்றப்படவில்லை.
இந்த நிலையில் இந்தி எதிர்ப்பு மசோதா தொடர்பாக தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் ஆக உள்ளதாகப் பரவும் வதந்தி! தமிழ்நாடு அரசு அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகளில் வெளியாகி வருகிறது.
இது முற்றிலும் வதந்தியே. "அப்படி எந்தவொரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை" என்று சட்டசபைச் செயலர் தெரிவித்துள்ளார். வதந்தியைப் பரப்பாதீர்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சட்டசபைக் கூட்டத் தொடரில் இந்தி எதிர்ப்பு தொடர்பாக எந்த வகையான மசோதாவும் நிறைவேற்றப்படாது என்றும் தெரிய வந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications