சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தாமிரபரணி ஆற்றில் நீர் எடுத்த பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்தவர்.. போராட்ட நாயகன் அப்பாவு! யார் இவர்?

Google Oneindia Tamil News

சென்னை: தாமிரபரணி ஆற்றில் தனியார் கூல்டிரிங்க்ஸ் நிறுவனங்கள் தண்ணீர் எடுப்பதற்கு எதிராக குரல் கொடுத்தவர் அப்பாவு.

Recommended Video

    Who Is Appavu? | Radhapuram MLA to Tamilnadu Assembly Speaker | Oneindia Tamil

    சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வென்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. 33 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில் அவர்களில் 15 பேர் புதிய முகங்களாவர்.

    பொதுவாக எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் நெல்லை மாவட்டத்தில் உள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவியோ சபாநாயகர் பதவியோ கொடுத்து அழகு பார்த்து வந்தனர்.

    முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக உறுதி மொழிமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏவாக உறுதி மொழி

    நெல்லை மாவட்டம்

    நெல்லை மாவட்டம்

    இதனால் இந்த முறை அமைச்சரவையில் நெல்லை மாவட்டத்து எம்எல்ஏக்களில் ஒருவர் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்பட்டடது. ஆனால் இப்படி எதுவும் நடக்கவில்லை. இதையடுத்து நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்த அப்பாவுக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்தது.

    வேட்பாளர்

    வேட்பாளர்

    அதன்படி அவர் இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்கிறார். யார் இந்த அப்பாவு என்பதை பார்ப்போம். 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 49 வாக்குகளில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது.

    முதல்முறையாக போட்டி

    முதல்முறையாக போட்டி

    இந்த நிலையில் அதே தொகுதியில் போட்டியிட இந்த முறை அப்பாவுக்கே சீட் வழங்கப்பட்டது. போட்டியிட்டார், வென்றார். தற்போது 16ஆவது சபாநாயகராக தேர்வு செய்யப்படுகிறார். 69 வயதான அப்பாவு தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் மூப்பானாரின் தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்தார். இதையடுத்து 1996 ஆம் ஆண்டு ராதாபுரம் தொகுதியில் முதன்முறையாக போட்டியிட்டு வென்றார்.

    தேமுதிக வெற்றி

    தேமுதிக வெற்றி

    தமாகவிலிருந்து பிரிந்த போது 2001 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் சுயேச்சையாக இருந்து வெற்றி பெற்றார். பின்னர் 2006 இல் திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வென்றார். 2011 ஆம் ஆண்டு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ராதாபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. எனினும் காங்கிரஸ் கட்சிக்காக அப்பாவு வாக்கு சேகரித்தார். எனினும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் வென்றார்.

    நீதிமன்றம் சென்ற அப்பாவு

    நீதிமன்றம் சென்ற அப்பாவு

    இதையடுத்து 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அப்பாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. வெறும் 49 வாக்குகளில் அப்பாவு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக அப்பாவு புகார் அளித்தார். நீதிமன்றத்திற்கு சென்றார்.

    தேர்வு

    தேர்வு

    மறுவாக்கு எண்ணிக்கைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்படாமலேயே 2021 ஆம் ஆண்டு தேர்தலும் வந்தது, இந்த தேர்தலில் அப்பாவு சூப்பராக வென்றார். சட்டசபை நிகழ்வுகளில் அனுபவம் வாய்ந்த இவர் சபாநாயகராக தேர்வாகிறார்.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    விவசாயிகளின் உரிமைகளுக்காக அப்பாவு பிரச்சாரம் செய்தவர். விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் பேசியுள்ளார். பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

    English summary
    Radhapuram MLA Appavu is the speaker of Tamilnadu Assembly. Who is he?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X