காசு காசு பத்திரம்.. +63 +84,+62, +254.. இதெல்லாம் என்ன நம்பர் தெரியுமா.. ஜாக்கிரதையா இருங்க.. வார்னிங்
சென்னை: தொழில்நுட்பங்கள் பெருக பெருக, அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் பெருகி கொண்டிருக்கின்றன.. இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், புது எச்சரிக்கை ஒன்றை பொதுமக்களுக்கு விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள், ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறிவருகின்றன.. நாங்கள் கேட்கும் பணத்தை அனுப்பாவிட்டால் உன் மானம் போய் விடும்" என்று மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து கொண்டிருக்கிறார்கள்.

அழைப்புகள்: இதுபோன்ற கும்பல்கள், முதலில் ஆசையை தூண்டிவிட்டுதான், பணம் பறிக்கும் மோசடியில் இறங்குவார்களாம்.. வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ, குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம்..
பேஸ்புக் போன்ற சோஷியல் மீடியாக்களில் உள்ள போன் நம்பரை எடுத்து தொடர்பு கொள்ளவும் செய்வார்கள்.. அதனால், அறிமுகம் இல்லாத பெண்களிடம் இருந்து வரும் இதுபோன்ற அழைப்புகளை ஏற்று ஏமாற வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து பொதுமக்களிடம் வலியுறுத்தியபடியே உள்ளனர்.

வீடியோக்கள்: கடந்தவாரம்கூட, போலீசார் முக்கிய அட்வைஸ் ஒன்றை கூறியிருந்தனர்.. "வியட்னாம், மொராக்கோ, இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்கள், வீடியோக்களுடன் அடிக்கடி அழைப்புகள் வருகின்றன. இதனால் சென்னையில் வசிக்கும் இளைஞர்கள் முதல் வயதான நபர்கள் வரை பெரும்பாலானவர்கள் தவித்துப்போய் உள்ளனர். இது போன்ற அழைப்புகளை எடுத்து பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன.
எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இந்த அழைப்புகள் எதற்காக வருகின்றன? என்பதை யூகிக்க முடியவில்லை என போன் அழைப்புகளால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.. ஆனால் இந்த அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடும்.. வெளிநாடுகளில் இருந்து வரும் இது போன்ற அழைப்புகளை யாரும் எடுக்க வேண்டாம். அப்படி எடுத்தால் அது தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்தி விடும்.
ஆடையின்றி தோன்றும் பெண்கள்: குறிப்பாக வெளிநாட்டு அழைப்புகள் வரும்போது திடீரென ஆடையின்றி பெண்கள் தோன்றி விடுவார்கள்.. அதனை நீங்கள் ஒரு கணம் பார்த்து விட்டாலே உங்கள் போட்டோ அவர்களின் செல்போனில் பதிவாகிவிடும். இதை வைத்து எதிர்முனையில் போன் செய்தவர்கள் உங்களிடம் பணத்தை பறிக்க வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற ஃபோன் அழைப்புகளை புறக்கணிக்க வேண்டும்.. பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி போலீசில் புகார் அளிக்கவேண்டும்" என்று போலீசார் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இன்னொரு அறிவிப்பினை போலீசார் வெளியிட்டுள்ளனர்.. +63 +84,+62, +254,+212,+917 ஆகிய சர்வதேச குறியீடுகளுடன் தொடங்கும் எண்களில் இருந்து வாட்சப் கால் வந்தால் அதை எடுக்கக்கூடாது என்றும், அந்த நம்பரை யாரும் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் சைபர் கிரைம் எச்சரித்துள்ளது.. நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், லிங்கிடு இன் ஆகிய சோஷியல் மீடியாக்களில் நமக்கிருக்கும் தரவுகளை பெற்று, நம்மையே மோசடியில் சிக்கவைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறியுள்ளது..
டி - ஆக்டிவேட்: அதாவது, சம்பந்தப்பட்ட நம்பர்களில் இருந்து தொடர்பு கொள்வோர், நமக்கு பெரிய தொகையில் பரிசு உள்ளது என்று ஆசையை தூண்டுவார்கள். அந்த பரிசு பொருளை விமானம் மூலம் அனுப்பி வைக்கவுள்ளோம், அதற்கான வரியை நீங்கள் கட்டினால் மட்டுமே பொருள் உங்களை வந்து சேரும் என்றும் மோசடி வலையில் சிக்க வைப்பார்கள்.. பணம் தங்கள் கைக்கு வந்ததும், அந்த எண்ணை டிஆக்டிவேட் செய்து செய்துவிடுவார்கள்.. அதனால், கவனமாக இருக்கும்படியும் எச்சரித்துள்ளது.
இதுதான் நம்பர்: அந்த எண்களில் இருந்து நள்ளிரவில் அதிக அழைப்புகள் வந்திருக்கின்றன.. தனியார் ஊழியர், தொழிலதிபர், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கே இப்படிப்பட்ட அழைப்புகள் நிறைய வந்துள்ளன.. அதனால், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியாவின் நம்பர்களான +63 +84,+62, +254,+212,+917 ஆகியவற்றை குறித்துவைத்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை அந்த நம்பரில் இருந்து போன் வந்தால், உடனே நம்பரை பிளாக் செய்துவிட வேண்டும், சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் கொடுக்க வேண்டும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications