உயில் எழுத ஆவணங்கள் தேவை? மனைவி பெயரில் சொத்து எழுதும்போது, இதை கவனியுங்க.. உயிலின் முக்கியத்துவம்
சென்னை: உயில் எழுதும்போது தேவைப்படும் ஆவணங்கள் என்னென்ன? வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தால் மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடுமா? எத்தனை முறை உயில்களை எழுதி வைக்கலாம்? இதன் நடைமுறைகள் என்ன என்பதை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
உயில் எழுதும்போது, ஒருவர் தான் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே பிறருக்கு எழுதி வைக்கலாம்.. மற்றபடி பூர்வீக சொத்துக்களை யாருக்குமே உயிலாக எழுதி வைக்க முடியாது... அதை பிரித்து எழுதி வைக்கவும் முடியாது.. வேண்டுமானால், பூர்வீக சொத்துக்களை அனுபவித்து கொள்ளலாம்.

அதேபோல, தாத்தா, பாட்டி இருந்தாலும்கூட, சொத்துக்களை பிரித்து வாரிசுகளுக்கு தர முடியாது. உயில் எழுதி வைக்காவிட்டாலும்கூட, அவர்களின் நேரடியாக வாரிசு அடிப்படையில் பிள்ளைக்கு வந்துவிடும்... தவிர்க்க முடியாத காரணத்தினால், பூர்வீக சொத்தை உயிலாக எழுதி வைக்க வேண்டுமானால், தங்களின் பெயருக்கு சொத்துக்களை மாற்றி, அதன்பிறகே உயிலாக எழுதி வைக்க முடியும்..
மனைவி பங்கு: வாரிசுகளுக்கு உயில் எழுதி வைத்தால், மனைவிக்கும் அதில் பங்கு கிடைத்துவிடும் என்று கருத முடியாது... அந்த சொத்துக்கு மனைவி எந்த வகையிலும் உரிமை கோரவும் முடியாது.. எனவே, ஒருவர் தன்னுடைய சுய சம்பாத்தியத்தில் சேர்த்து வைத்த சொத்தை தன்னுடைய வாரிசுகளுக்கு உயில் எழுதி வைப்பதாக இருந்தால், மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதலாம்.
அதேபோல் தன்னுடைய சுய சம்பாத்திய சொத்துக்களை மனைவி பெயரில் மட்டுமே எழுதி வைப்பதும், சிக்கலை தந்துவிடும். காரணம், உயிலில் மனைவி பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டால், வாரிசுகளால் உரிமை கொண்டாட முடியாது. மனைவி பெயர் மட்டுமே உயிலில் இருந்தால், அது அவருக்கு மட்டுமே உரிய சொத்தாக மாறிவிடும்.. அதன்பிறகு மனைவி, அந்த சொத்தை யாருக்கு கொடுக்க விரும்புகிறாரோ அவருக்குதான் அது போய்ச்சேரும்.
வாரிசுகள்: அதேபோல, வாரிசுகளில் ஒருவருக்கு அதிகமாக சொத்துக்கள் கிடைத்தால், மற்றவர் அதை எதிர்க்க முடியாது. உதாரணத்துக்கு வாரிசுகளில் 4 பேர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.. இதில், 3 பேருக்கு மட்டுமே சொத்தை பங்கிட்டு தந்துவிட்டால், அது செல்லுபடியாகும். 4வது வாரிசு, தனக்கு பாகம் பிரித்து தரவில்லை என்று எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது... வாரிசுகளுக்கும் சம அளவில்தான் சொத்து பிரிக்கப்பட வேண்டும் என்று நிர்பந்திக்கவும் முடியாது...
மனைவி வாரிசுகளை தவிர மற்ற வேறு யாருக்கு வேண்டுமானாலும் சொத்தை பிரித்து கொடுக்கலாம். எனவே, உயில் எழுதும்போது யார் யாருக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்பதை தெளிவாக எழுதிவிடுவது நல்லது.
ஆவணங்கள்: உயில் எழுதுவதற்கு ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஆனால், உயில் எழுதப்படும் சொத்தின் விவரங்கள் தெளிவாக இருக்க வேண்டும். சாதாரண வெள்ளை தாள், பத்திர தாள் என எதில் வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம்.. எனினும், முறைப்படி உயில் எழுதுவதாக இருந்தால் பேப்பரில் ஸ்டாம்ப் ஒட்டி உயிலை எழுதி 2 பேர் சாட்சி கையெழுத்து போட்டு அதை ரிஜிஸ்டர் ஆபீஸில் பதிவு செய்து கொள்வது நல்லது.
உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமல்லாமல் விருப்பமானவர்களுக்கும் எழுதி வைக்கலாம்.. டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம். இன்னும் பிறக்காத குழந்தைக்குகூட உயில் எழுதலாம்., பிறக்கப்போகும் பேரக்குழந்தைக்கும் உயில் எழுதலாம்.. ஆனால், 18 வயது நிரம்பாத நபருக்கு உயில் எழுதப்பட்டால், அதற்கு கார்டியனாக ஒருவரை நியமிக்க வேண்டும். உயில் எழுதியவர் இறந்துவிட நேர்ந்தால், அந்த உயிலை கோர்ட்டில் மெய்ப்பிக்க வேண்டும். 3 வருடத்துக்குள் உயிலை மெய்ப்பிக்காவிட்டால், தாமதத்துக்கான காரணங்களை கோர்ட்டில் சொல்ல வேண்டியிருக்கும் என்பது விதியாகும்.
அதேபோல, உயில் எழுதும்போது பேனாவிலும் எழுதலாம். கம்ப்யூட்டரில் டைப் செய்து கொள்ளலாம்.. ஒருவர் தன்னுடைய பெயரில் உள்ள அசையும் பொருள்கள், அசையாத பொருள்கள் என்னென்ன என்பதை முன்கூட்டியே எழுதி தயாராக வைத்து கொள்ள வேண்டும். எந்த சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என்றும் தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். 2 சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயில் எழுதுவதற்கென முத்திரைத்தாள் எதுவும் தேவைப்படாது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications