சொந்த ஊர் போறீங்களா.. சென்னை மெட்ரோ சூப்பர் அறிவிப்பு.. இன்று இரவு ஈஸியாக போகலாம்!
சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊர் செல்வோருக்கு வசதியாக, இன்று மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே சென்னை மக்களே மெட்ரோவில் ஏறி எளிதாக கோயம்பேட்டினை அடைந்து ஊருக்கு செல்லலாம்.
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரம் மெட்ரோ ரயில் சேவை இன்று (11ம் தேதி ஆகஸ்ட்) மட்டும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே மெடரோ ரயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரில்மிகுநேரங்களில் இயக்கப்படுமம் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கட்ட மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இன்று மட்டுமே" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து ஏராளமான சிறப்புபேருந்துகள் தென் மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளது.ஆகஸ்ட் 11ம் தேதியான இன்று வெள்ளிக்கிழமையாகும். நாளை சனிக்கிழமை, நாளை மறுநாள் ஞாயிறு, இடையில் ஒரு நாள் திங்கள் மட்டுமே வேலை நாள் ஆகும். செவ்வாய்கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் என்பதால் விடுமுறை தினம் ஆகும்.
எனவே மக்கள் விடுமுறையை முன்னிட்டு பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி உள்ளனர். அவர்களுக்காக சிறப்பு பேருந்துகளை அரசு அறிவித்துள்ளது. ஆம்னி பேருந்துகளில் கட்டணங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு உள்ளதால் மக்கள் அரசு பேருந்துகளில் ஏறவே ஆர்வம் காட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications