முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில்.. திடீரென குவிந்த ஏபிவிபி மாணவிகள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்!
சென்னை: முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அரியலூர் மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு இவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். அரியலூர் மாணவி தற்கொலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார்.

வழக்கு
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எம் திரிவேதி ஆகியோர் அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற விசாரணை முடியும் வரை சிபிஐ விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு போலீஸ் சிபிஐ அமைப்பிடம் போதுமான ஆவணங்களை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏபிவிபி
மேலும் தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க மாணவியின் தந்தைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு ஒரு பக்கம் நடக்கும் நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் வீட்டு வாசலில் திடீரென ஏபிவிபி பிரிவை சேர்ந்த மாணவியர் சிலர் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவு ஏபிவிபி ஆகும். இந்த அமைப்பு தொடர்ந்து அரியலூர் மாணவி விவகாரத்தில் போராடி வருகிறது.

போராட்டம்
அரியலூர் மாணவியை மத மாற்றம் செய்ய முயன்றதாகவும். பள்ளி நிர்வாகம் மத மாற்ற அழுத்தம் கொடுத்த காரணத்தால் அந்த மாணவி பலியானதாகவும் இந்த அமைப்பு கூறி போராட்டம் செய்து வருகிறது. இந்த நிலையில்தான் மாணவியின் மரண வழக்கு சிபிஐக்கு சென்றதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திடீரென இன்று பிற்பகல் ஏபிவிபி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் நிதி திரிப்பாதி ஆகியோர் போராட்டம் செய்தனர்.

கோஷம்
முதல்வர் வீட்டு முன் அமர்ந்த 3 ஏபிவிபி அமைப்பை சேர்ந்த மாணவிகள் முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர். அதோடு அந்த மாணவி பெயரை கத்தி கோஷம் எழுப்பினர். திடீரென 3 பேர் இப்படி முதல்வர் வீடு முன் போராட்டம் செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு வந்த பெண் போலீசார் மூன்று மாணவிகளையும் கைது செய்தனர். அவர்கள் வர மறுத்த நிலையில் குண்டுகட்டாக கட்டி அவர்களை தூக்கி சென்றனர்.
-
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
இருந்தாலும் அவருக்கு இவ்வளவு ஆகாது! கூட்டணிக்கு வருமா? வராதா? பாஜகவுக்கு பிரஷர் ஏற்றும் புதியதமிழகம் -
பாஜக உறவை முறிக்கும் என்.ஆர்.காங்கிரஸ்.. ஜோஸ் மார்ட்டினால் வந்த சிக்கல்! விஜய்யுடன் சேரும் ரங்கசாமி? -
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
மம்தாவை சுத்துபோடும் பாஜக.. பதிலுக்கு சக்கர வியூகம் போட்டு தூக்கும் திரிணாமுல்! யாரும் எதிர்பார்க்கல -
சட்டம் அதன் கடமையை செய்யும்.. விஜய் பிஜேபி கூட போகவே மாட்டாரு.. ஏனென்றால்? விடாமல் அடிக்கும் ஜூலி -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார்












Click it and Unblock the Notifications