வெற்றிக்கொடி கட்டு... 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த மனிதர்..!
வெற்றிக்கொடி கட்டு... 41 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக காவல்துறைக்கு பெருமை சேர்த்த மனிதர்..!
சென்னை: ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தமிழக காவல்துறையை சேர்ந்த நாகநாத பாண்டி தேர்வாகியுள்ளதை அடுத்து அவருக்கு காவல்துறை உயரதிகாரிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை பெருநகர குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன், தடகள வீரர் நாகநாத பாண்டியை பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் வெற்றிக் கொடிக்கட்டு என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாடு காவல்துறையிலிருந்து 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள சென்னை பெருநகர காவலர் நாகநாத பாண்டிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தமிழக காவல்துறைக்கே பெருமையான தருணம் எனக் குறிப்பிட்டு தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் அர்ஜூன் சரவணன் ஐ.பி.எஸ். உயர்பதவியில் இருந்தாலும் கூட தன் துறையை சேர்ந்த இளநிலை காவலர் ஒருவர் சர்வதேச போட்டிக்கு தேர்வாகியிருப்பதால் பொதுவெளியிலேயே நாகநாத பாண்டியை பாராட்டி பதிவு வெளியிட்டுள்ளார் அர்ஜுன் சரவணன்.
ராமநாதபுரம் மாவட்டம் சிங்கபுளியம்பட்டியை சேர்ந்த நாகநாத பாண்டி மிகவும் எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். தற்போது சென்னை பெருநகர காவல்துறையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் ஆடவருக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் இவர் பங்கேற்கவிருக்கிறார். இதனிடையே ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழகத்தை சேர்ந்த ஐவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை அறிவித்திருக்கிறார்.
இதனிடையே அர்ஜுன் சரவணனை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் பலரும் நாகநாத பாண்டியை தொடர்பு கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லம் வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications