சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி.. கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீடு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற ஆயுதப்படை காவலர் திடீரென நெத்தியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சிக்கான கடிதத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதிவைத்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது போல் பணிச்சுமை காரணமாக ஆங்காங்கே போலீஸார் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications