காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு
பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல" என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் குமுறி உள்ளார்.
7 தமிழர்களை விடுதலை செய்ய பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இது சம்பந்தமான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

அற்புதம்மாள்
இதைதவிர, மகன் விடுதலை குறித்து மக்களிடம் நியாயம் கேட்டும் போராட்டம் செய்தார். தன் மகன் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள்
|
ட்விட்டர் பதிவு
இன்றோடு, பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29-ம் ஆண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அற்புதம்மாள் ட்விட்டரில் தனது மனக்குமுறலை கொட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது இதுதான்:
|
நிரபராதி
"காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதி பேரறிவாளன். வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.
|
குற்றவாளி
161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்பு தந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க.

ஆதங்கம்
விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டு சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம் நீதி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே. சட்டம், நீதிங்கறது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா? " என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications