காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க.. இன்னும் விடியல.. அற்புதம்மாளின் கண்ணீர் பதிவு
பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை: "காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல" என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் குமுறி உள்ளார்.
7 தமிழர்களை விடுதலை செய்ய பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசும் இது சம்பந்தமான தீர்மானத்தையும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.
பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளும் ஆளுநரை நேரில் சந்தித்து தனது 7 பேரையும் விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.

அற்புதம்மாள்
இதைதவிர, மகன் விடுதலை குறித்து மக்களிடம் நியாயம் கேட்டும் போராட்டம் செய்தார். தன் மகன் விடுதலையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை தொடர்ந்து, சளைக்காமல் முன்னெடுத்து வருகிறார் அற்புதம்மாள்
|
ட்விட்டர் பதிவு
இன்றோடு, பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 29-ம் ஆண்டு தொடங்குகிறது. இதை முன்னிட்டு, அற்புதம்மாள் ட்விட்டரில் தனது மனக்குமுறலை கொட்டி உருக்கமாக பதிவிட்டுள்ளார். அது இதுதான்:
|
நிரபராதி
"காலை அனுப்பிடறோம்னு சொல்லி அழைச்சிட்டு போனாங்க. இன்னைக்கு 29ஆம் ஆண்டு தொடங்குது. இன்னும் அந்த இரவு விடியல. அரசியல் கொலையில சீரழிக்கப்பட்ட சாமானிய நிரபராதி பேரறிவாளன். வெளியே நானும், உள்ளே அவனும் போராடி மருகி செத்துபோகலாம். ஆனா காரணமானவங்கள காலம் அடையாளம் காட்டும்.
|
குற்றவாளி
161ல் அறிவு தந்த மனுமீது உச்ச நீதிமன்றம் போட்ட உத்தரவ மதிக்காம குப்பையா நினைக்கிறவங்கதான், தீர்ப்பு தந்த நீதிபதி, வாக்குமூலம் பதிஞ்ச அதிகாரி உண்மைய சொன்னபிறகும் அறிவை குற்றவாளின்னு சொன்ன தீர்ப்ப மட்டும் மதிக்கனும்னு கூக்குரலிடறாங்க. உண்மை குற்றவாளிய கண்டறிய போராடாம மறைந்தவர் பெயரால அருவெறுப்பான அரசியல் செய்யறாங்க.

ஆதங்கம்
விடுதலைக்கான வெற்று அடையாள அரசியல் சலிப்பை தருது. 28 ஆண்டு சட்டத்தின் ஆட்சி என்னன்றத நல்லா பாத்துட்டேன். சட்டம் நீதி என்பதெல்லாம் பணக்காரர்களுக்கு மட்டுமே. சட்டம், நீதிங்கறது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே உள்ள வசதியா நீடிக்கனுமா? " என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications