தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு.. விஜயகாந்த் இறுதி அஞ்சலிக்காக இரவோடு இரவாக ஏற்பாடுகள் தீவிரம்!
சென்னை: விஜயகாந்த் உடல் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வந்தனர். பின்னர் அவரது உடல் கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறைந்த விஜயகாந்த் உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். விஜயகாந்தின் உடல் நாளை மாலை வரை பொதுமக்களின் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும், நாளை மாலை 4.30 மணியளவில் தேமுதிக அலுவகத்தில் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலி செலுத்த ஏராளமான பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், இட நெருக்கடி காரணமாக, அதிகமானோர் அஞ்சலி செலுத்துவதில் சிரமம் உள்ளதன் காரணமாகவும், மேலும் ஏராளமானோர் விஜயகாந்த் உடலை கடைசியாக ஒருமுறை பார்ப்பதற்காக வருகை தருவதன் காரணமாகவும், பாதுகாப்பு கருதி, சென்னை தீவுத் திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக நாளை காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை வைக்கப்படுகிறது.
விஜயகாந்த் உடல் தீவுத்திடலில் அஞ்சலி செலுத்தும் வகையில் பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலக பிரபலங்கள், மற்றும் கலைத்துறையை சேர்ந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை, அண்ணா சாலையில் உள்ள தீவுத்திடலில் நாளை காலை 6 மணியில் இருந்து மதியம் 1 மணி வரை பொதுமக்கள் பார்வைக்கு அவரின் உடல் வைக்கப்படுகிறது.
விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலம் தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை கழக அலுவலகம் அடைந்து, இறுதிச்சடங்கானது 4.45 மணியளவில் தேமுதிக தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என தேமுதிக தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக விஜயகாந்த் உடல் வைக்கப்படவுள்ள தீவுத்திடலில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து, அஞ்சலி நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாளை அதிகாலையில் கோயம்பேட்டில் இருந்து விஜயகாந்த்தின் உடல் தீவுத் திடலுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications