யார் யாருக்கு அரியர் தேர்வு ரத்து பொருந்தும்? தமிழக அரசு சொல்வது என்ன!
சென்னை: கொரோனா காரணமாக எத்தனை ஆண்டு அரியர் வைத்திருந்தாலும் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு யார் யாருக்கு பொருந்தும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
Recommended Video
தமிழக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவர்கள், பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர்கள், இளநிலை பட்டப் படிப்பில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுநிலை பொறியியல் படிப்பில் முதலாம் ஆண்டு, எம்சிஏ, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளை பொறுத்தவரை இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்ல ஜூலை 23ம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.
கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, உயர் மட்டக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலும், பல்கலைக் கழக மானியக் குழு, தொழில் நுட்பக் கல்விக் குழுவின் வழிகாட்டுதலின் படி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு பொருந்தும்
இந்நிலையில் தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு ரத்து குறித்து இதுவரை இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதன்படி யாருக்கெல்லாம் தேர்வு ரத்து ஆகும்.

மற்ற பருவப்பாடங்களுக்கு பொருந்தும்
இறுதி பருவ தேர்வுக்கு அரியர் வைத்திருந்தால் அவர்களுக்கு தேர்வு ரத்து பொருந்தாது. இறுதி பருவத் தேர்வுகளை தவிர மற்ற பருவப்பாடங்களின் தேர்வுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மணவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மதிப்பெண் அளித்து தேர்ச்சி
ஏற்கனவே படித்து முடித்து சென்ற மாணவர்களுக்கு, தேர்வு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கு தேர்வின்றி, யூ.ஜி.சி, வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்கி தேர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு ரத்து
தொலைநிலைக்கல்வி மூலம் பயின்று அரியர் தேர்வுக்காக கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக உயர் கல்வி துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

எத்தனை தாள் தேர்வு கட்டணம்
எத்தனை தாள்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதோ, அத்தனை தேர்வும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக யூ.ஜி.சி, வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்கப்படும். கலை அறிவியல், பொறியியலில் இளநிலை, முதுநிலை, பட்டயம், எம்சிஏ படிப்பை தற்சமயம் படிக்கும் மாணவர்களுக்கும், படித்து முடித்த மாணவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என உயர்கல்விதுறை அறிவித்துள்ளது.

விரிவான அரசாணை
மதிப்பெண் வழங்கும் முறை குறித்த விரிவான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக உயர்கல்வி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளளது. அரசின் அறிவிப்பு காரணமாக தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பயன் அடைவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications