விபச்சார பெண்ணுக்கு உதவி.. "கஸ்டமரை" மிரட்டியதாக சிக்கிய ஏட்டு.. தலைமறைவு

விபச்சார வழக்கில் ஏட்டு பார்த்திபன் தலைமறைவாகி உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்ணுடன் சேர்ந்து விபச்சாரத்தில் ஈடுபட்ட கோயம்பேடு ஏட்டு தலைமறைவாகி உள்ளார். எனவே அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

அரும்பாக்கத்தை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் சேர்ந்து கோயம்பேடு ஏட்டு பார்த்திபனும் விபசார தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் பாடியை சேர்ந்த ஒரு கால்டாக்சி டிரைவர் விஸ்வநாதன் ஜெயந்தி வீட்டுக்கு கஸ்டமராக சென்றிருக்கிறார். ஜாலியாக இருந்துவிட்டு கிளம்பும்போது, ஜெயந்தியிடம் பணம் தந்திருக்கிறார். ஆனால் பணம் பத்தாது, இன்னும் வேண்டும் என்று ஜெயந்தி சண்டை பிடிக்கவும் அது தகராறாக வெடித்தது.

திரும்பிய கேஸ்

திரும்பிய கேஸ்

உடனே ஜெயந்தியிடம் இருந்து தகவலறிந்து வந்த ஏட்டு, ரெய்டுக்கு போவது போல சென்று, விசுவநாதன் பைக்கை எடுத்து கொண்டு வந்துவிட்டார். அதுமட்டும் அல்லாமல் ஜெயந்தி போலீசிலும் விஸ்வநாதன் மீது புகார் அளிக்க, கடைசியில் இவர்களுக்கு எதிராகவே இந்த கேஸ் திரும்பிவிட்டது.

சஸ்பெண்ட்

சஸ்பெண்ட்

ஜெயந்தி செல்போனை ஆராய போனால், இருவரின் லீலைகளும் அதில் பளிச்சென தெரிந்தன. அதன்பிறகுதான் ஏட்டு மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வேலையிலிருந்து அவரை உயரதிகாரிகள் சஸ்பெண்டும் செய்தனர்.

ஜெயந்தி சிறையிலடைப்பு

ஜெயந்தி சிறையிலடைப்பு

இதனையடுத்து ஜெயந்தியை போலீசார் கைது செய்து புழலில் அடைத்துவிட்டார்கள். ஆனால் ஏட்டு பார்த்திபனை நேற்றிலிருந்து காணவில்லையாம். எங்கு போனார் என்றே தெரியவில்லை என்பதால் அவரை தேடும் பணி நடக்கிறது.

2 தனிப்படைகள்

2 தனிப்படைகள்

எப்படியாவது அவரை கண்டுபிடித்து கைது செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளார்களாம். அவரது போனும் நேற்றிலிருந்து ஸ்விட்ச் ஆப் ஆகியே இருக்கிறது. அதனால் ஏட்டுவை கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+