Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவில் இருந்து மீண்டும் வந்தவருக்கு பதவி.. மநீம பொதுச்செயலாளர் அருணாச்சலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு!

பாஜகவில் இருந்து மீண்டும் மநீம கட்சிக்கு வந்த அருணாச்சலத்திற்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி கமலஹாசன் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான செந்தில் ஆறுமுகம், அருணாச்சலம், முரளி அப்பாஸ் உள்ளிட்ட செயற்குழு மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பாஜகவில் இருந்து வந்தவருக்கு பதவி

பாஜகவில் இருந்து வந்தவருக்கு பதவி

அதில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியிலேயே இணைந்த அருணாச்சலத்திற்கு கமல்ஹாசன் தற்போது கூடுதல் பொறுப்பாக வகித்து வரும் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநிலம் முழுவதிலும் பூத் கமிட்டிகள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

மீடியா மற்றும் ஐடி அணிகள் பிரிப்பு

மீடியா மற்றும் ஐடி அணிகள் பிரிப்பு

கமல்ஹாசன் விரைவில் மேற்கொள்ள இருக்கும் கட்சி மறுசீரமைப்பு பொறுப்புகள் இந்த செயல் திறனின் அடிப்படையில் தான் இருக்கும் என கமல் அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் கொள்கைகளையும் திட்டங்களையும் கடைக்கோடி தமிழர்க்கும் கொண்டு சேர்க்கும் வகையில் மீடியா மற்றும் ஐடி அணி நான்காக பிரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி

ஈரோடு கிழக்கு தொகுதியில் கமல்ஹாசன் மேற்கொண்ட பரப்பரை வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்களிப்பாற்றிய திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் அனைத்து அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், நற்பணி இயக்க நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மகளிர் தினம்

மகளிர் தினம்

மேலும் சர்வதேச மகளிர் தினத்தை மகளிர் அணி சிறப்பாக கொண்டாட முடிவு எடுக்கப்பட்டதோடு,கலை, இலக்கிய பண்பாட்டு செயல்பாடுகளை முன்னெடுக்க, பொது நல சேவைகளை மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் சார்பணிகள் துணைத் தலைவர் மௌரியா தலைமையிலும், கட்சி வளர்ச்சிப் பணிகள் தங்கவேலு தலைமையிலும் செயல்படும் என கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த அருணாச்சலம்?

யார் இந்த அருணாச்சலம்?

2018ல் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கப்பட்டபோது பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர் அருணாச்சலம். இவர் திடீரென மநீம கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார். இதனிடையே மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கே திரும்பினார். பாரத் ஜோடா யாத்திரை, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரம் ஆகியவற்றில் அருணாச்சலம் சிறப்பாக பணியாற்றியதால், இவருக்கு மீண்டும் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+