2 நாட்களில் முடியும் வேட்புமனு தாக்கல்.. என்னது இத்தனை வேட்பாளர்களா.. ஆடிப்போன வாக்காளர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதுவரை 1,015 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்குப் போட்டியிட விரும்புவார்களிடம் இருந்து கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

முதல் நாளில் துணை முதல்வர் போடிநாயக்கனூர் தொகுதியில் ஒ பன்னீர் செல்வம் திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திங்கள்கிழமை நல்ல நாள் என்பதால் பல்வேறு தலைவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், அமமுக தலைவர் டிடிவி தினகரன் கோவிட்பட்டி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இதுவரை 1,015 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 854 பேர் ஆண் வேட்பாளர்கள் ஆகும். அதேபோல 161 பெண் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications