Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரதமர் தமிழகம் வந்த நாளில் காங்.-கில் மற்றொரு விக்கெட் காலி! பாஜகவில் இணைந்தார் ராஜாஜி கொள்ளு பேரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ராஜாஜி கொள்ளு பேரன் கேசவன் இன்று பாஜகவில் இணைந்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான காலமே இருந்து வருகிறது. அக்கட்சியின் பல மூத்த தலைவர்களும் பாஜகவில் இணைந்து வருகிறார்கள்.

As Modi arrives to Chennai, Great-grandson of Congress C Rajagopalachari, CR Kesavan joins BJP

சமீபத்தில் தான் உருங்கிணைந்த ஆந்திராவின் கடைசி முதல்வராக இருந்த காங்கிரஸின் கிரண் குமார் ரெட்டி பாஜகவில் இணைந்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராஜாஜியின் கொள்ளுப் பேரனுமான சி.ஆர்.கேசவன் இன்று பாஜகவில் இணைந்தார்.

தலைமுறை தலைமுறையாக அவரது குடும்பத்தினர் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து வந்தனர். சி.ஆர் கேசவனும் காங்கிரஸில் தான் இருந்தார். 2001ஆம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த அவர், காங்கிரஸில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார். கடந்த பிப். 23ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகியிருந்தார்.

As Modi arrives to Chennai, Great-grandson of Congress C Rajagopalachari, CR Kesavan joins BJP

இந்தச் சூழலில் தான் இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியான பாஜகவில் என்னை இணைத்ததற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன், நமது பிரதமர் தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், பாஜகவில் இணைந்தது மகிழ்ச்சி..

பிரதமர் மோடியின் மக்கள் நலன் சார்ந்த கொள்கைகள், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் சீர்திருத்தங்களை உள்ளடக்கிய வளர்ச்சி இந்தியாவை பலவீனமான பொருளாதாரத்தில் இருந்து உலகின் 5ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றியுள்ளது.

As Modi arrives to Chennai, Great-grandson of Congress C Rajagopalachari, CR Kesavan joins BJP

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் வீடு பெற்றவர்களை எனக்குத் தெரியும். இப்போது இருக்கு அரசு மக்களுக்கு நேரடியாகத் திட்டங்களை வழங்குகிறது.

காங்கிரஸ் இப்போது எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் உடன்பட்டேன் என சொல்ல முடியாது. இதன் காரணமாகவே தேசிய அளவில் எனக்கு அளித்த பொறுப்பை நான் நிராகரித்தேன். மேலும் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பதைத் தவிர்த்தேன்" என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கடைசி கவுர்னர் ஜெனரலாக இருந்தவர் ராஜாஜி. மத்திய உள்துறை அமைச்சராக இருந்துள்ள இவர், மெடராஸ் மாகாண முதல்வராகவும், மேற்கு வங்கத்திற்கு கவர்னராகவும் இருந்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+