மீண்டும் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள்.. அசோக் லேலண்ட் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஐந்து நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டு நாளும், அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மூன்று நாட்களையும் வேலையில்லாத நாள் ஆக அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறை நாட்டில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்டர்கள் இல்லாமல் தவிக்கின்றன. இதனால் பல லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள்.

70 சதவீதம் உற்பத்தி பாதிப்பு
இந்த பிரச்சனை சிறிய நிறுவனங்களை மட்டுமல்ல பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த நிறவனத்தின் வாகன உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 70 சதவீதம் குறைந்து போனது.

கடந்த மாதம் கடும் பாதிப்பு
கடந்த மாதம் 12 நாட்களை சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனம் வேலையில்லாத நாளாக அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. அவர்கள் வேலையில்லாமல் தவித்தனர் .

அசோக் லேலண்ட் அறிவிப்பு
இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் ஐந்து நாட்களை தனது ஊழியர்களுக்கு வேலையில்லாத நாளாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "வாகன விற்பனையில் மந்தநிலை தொடர்ந்து வருவதன் காரணமாக நிறுவனத்தின் நலனுக்காக சில முடிவுகளை நிறுவனம் எடுத்திருக்கிறது. இதன்படி செப்டம்பர் 28ம் தேதி மற்றும் செப்டம்பர் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஆகிய நாட்கள் வேலையில்லாத நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது

அசோக் லேலண்ட் விளக்கம்
மேற்கண்ட ஐந்து நாட்கள் ஊழியர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம். இதில் செப்டம்பர் 28ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கமான ஏஎல்இசியு உடன் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும். வேலை இல்லாத நாளான செப்டம்பர் 30ம் தேதிக்கு மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்துடன் வழங்கப்படும் " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏஜிஎம் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications