மீண்டும் ஊழியர்களுக்கு வேலையில்லா நாட்கள்.. அசோக் லேலண்ட் முக்கிய அறிவிப்பு
சென்னை: சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மீண்டும் ஐந்து நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் இரண்டு நாளும், அக்டோபர் மாதத்தின் முதல் இரண்டு வாரத்தில் மூன்று நாட்களையும் வேலையில்லாத நாள் ஆக அறிவித்துள்ளது.
பொருளாதார மந்த நிலை காரணமாக வாகன உற்பத்தி மற்றும் விற்பனை துறை நாட்டில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆர்டர்கள் இல்லாமல் தவிக்கின்றன. இதனால் பல லட்சம் பேர் வேலையை இழந்து தவித்து வருகிறார்கள்.

70 சதவீதம் உற்பத்தி பாதிப்பு
இந்த பிரச்சனை சிறிய நிறுவனங்களை மட்டுமல்ல பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனத்தையும் விட்டுவைக்கவில்லை. அந்த நிறவனத்தின் வாகன உற்பத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 70 சதவீதம் குறைந்து போனது.

கடந்த மாதம் கடும் பாதிப்பு
கடந்த மாதம் 12 நாட்களை சென்னை எண்ணூர் அசோக் லேலண்ட் நிறுவனம் வேலையில்லாத நாளாக அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது. இதன் காரணமாக ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. அவர்கள் வேலையில்லாமல் தவித்தனர் .

அசோக் லேலண்ட் அறிவிப்பு
இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் மீண்டும் ஐந்து நாட்களை தனது ஊழியர்களுக்கு வேலையில்லாத நாளாக அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, "வாகன விற்பனையில் மந்தநிலை தொடர்ந்து வருவதன் காரணமாக நிறுவனத்தின் நலனுக்காக சில முடிவுகளை நிறுவனம் எடுத்திருக்கிறது. இதன்படி செப்டம்பர் 28ம் தேதி மற்றும் செப்டம்பர் 30ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஆகிய நாட்கள் வேலையில்லாத நாட்கள் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது

அசோக் லேலண்ட் விளக்கம்
மேற்கண்ட ஐந்து நாட்கள் ஊழியர்கள் யாரும் பணிக்கு வர வேண்டாம். இதில் செப்டம்பர் 28ம் தேதி மற்றும் அக்டோபர் 1ம் தேதி மற்றும் அக்டோபர் 8ம் தேதி மற்றும் அக்டோபர் 9ம் தேதி ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பாக ஊழியர் சங்கமான ஏஎல்இசியு உடன் கலந்து ஆலோசித்த பிறகு அறிவிக்கப்படும். வேலை இல்லாத நாளான செப்டம்பர் 30ம் தேதிக்கு மட்டும் செப்டம்பர் மாதத்திற்கான ஊதியத்துடன் வழங்கப்படும் " இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏஜிஎம் ரமேஷ் குமார் வெளியிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications