Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம.. கோவிஷீல்ட் போட்டுபின் ஃபைசர் வேக்சின் போட்டால்.. சூப்பர் எதிர்ப்புசக்தி கிடைக்குமாம்.. ஆய்வு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு பின் இரண்டாவது டோஸாக ஃபைசர் வேக்சின் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்ட் வேக்சின் கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆஸ்டர்செனகா நிறுவனம் இணைந்து இந்த வேக்சினை உருவாக்கியது.

இந்த நிலையில் கலவையான வேக்சின் பயன்படுத்தி குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதாவது முதலில் ஒரு வகையான வேக்சினை போட்டுவிட்டு, பின் வேறு வேக்சினை போட்டால் என்ன ஆகும் என்று ஆராய்ச்சி நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஏன்

ஏன்

உலகம் முழுக்க பல நாடுகளில் வேக்சின் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வேக்சின் டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பரந்துபட்ட வேக்சின் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில், கலவையான வேக்சின் பயன்பாடு குறித்த ஆராய்ச்சியை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் செய்தது. ஒரு வேக்சினை முதல் டோஸாக பயன்படுத்திவிட்டு, அடுத்த டோஸாக வேறு வேக்சினை பயன்படுத்தினால் பெரிய அளவில் தட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தபடும் என்பதால் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இது தொடர்பாக நடத்திய சோதனையில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு பின் இரண்டாவது டோஸாக ஃபைசர் வேக்சின் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதே சோதனை ஃபைசர் வேக்சின் போட்டுவிட்டு பின்னர் கோவிஷீல்ட் போட்டாலும் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. ஆனால் கோவிஷீல்ட் அதன்பின் ஃபைசர் போட்டால்தான் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

இரண்டு

இரண்டு

இரண்டு டோஸ் கோவிஷீல்ட் போடுவதை விட ஒரு டோஸ் கோவிஷீல்ட் பின்னர் ஃபைசர் டோஸ் போட்டால் அதிக எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதாம். இந்த டோஸ்களுக்கு இடையில் 4 வாரம் இடைவெளி விட வேண்டும் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உடலில் உருவாகும் டி செல்கள், கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

பயன்பாடு

இதனால் வேக்சின் தட்டுப்பாடு உள்ள நாடுகள் இந்த பயன்பாட்டு முறையை முயன்று பார்க்கலாம் என்று ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மொத்தம் 830 பேரிடம் இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர். வுஹனில் முதலில் பரவிய கொரோனா வகை வைரஸிடம் மட்டுமே இந்த வேக்சின் சோதனை செய்யப்பட்டுள்ளது. வரும் கால சோதனைகள் மற்ற வகை கொரோனாவிடம் எப்படி எதிர்ப்பு சக்தி கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்தும்.

மாடர்னா

மாடர்னா

அதேபோல் மாடர்னா, நோவாவாக்ஸ் வேக்சினை இதேபோல் மாற்றி மாற்றி கொடுத்து ஆராய்ச்சி செய்ய உள்ளனர். லண்டனில் தற்போது கோவிஷீல்ட் வேக்சின் டோஸ்களுக்கு இடையில் 12 வாரம் இடைவெளி விடப்பட்டுள்ளது. வேக்சின் டோஸ்களுக்கு இடையில் அதிக இடைவெளி விட்டால் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. 10 மாதங்கள் வர இடைவெளி விடலாம், இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று ஆக்ஸ்போர்ட் கூறியுள்ளது.

நிலை என்ன

நிலை என்ன

அதேபோல் கோவிஷீல்ட் மற்றும் ஃபைசர் டோஸ்களை 12 வார இடைவெளியில் போட்டு சோதனை செய்யும் முடிவிலும் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் உள்ளது. அதே சமயம் கோவிஷீல்ட் மற்றும் ஃபைசர் வேக்சினை மாற்றி மாற்றி போட்டால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும், அதே சமயம் தலைவலி உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகள் வரும், ஆனால் இவர் விரைவில் சரியாகிவிடும் என்று மருத்துவ ஆராய்ச்சி வார இதழான லான்செட் தெரிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+