வந்துருச்சு "ஆட்டோ ஆம்புலன்ஸ்".. அசத்தும் வட சென்னை வாலிபர்கள்.. வீடு தேடி வரும் ஆக்சிஜன்!
ஆக்ஸிஜன் ஆட்டோ ஆம்புலன்ஸ் சென்னையில் அறிமுகமாகி உள்ளது
சென்னை: வடசென்னையை சேர்ந்த பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட "ஆட்டோ ஆம்புலன்ஸ்" அறிமுகப்படுத்தி, இருக்கிறார்கள்.. இந்த ஆட்டோதான், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது.. இதில் சென்னை நிலைமை மோசமாக உள்ளது... நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தபடியே வருகிறது.
இதனால் ஆஸ்பத்திரிகள் நிறைந்து வழிகின்றன.. ஒருபுறம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும், இன்னொரு புறம்
தடுப்பூசிக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டு வருகிறது.. இதனால் சென்னைவாசிகள் மிகுந்த கவலைக்குள்ளாகி வருகிறார்கள்.

பாதிப்பு
மேலும், ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவையும் அதிகரித்தபடியே உள்ளது.. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுத் தனிமையில் இருக்கிறார்கள்.. இவர்களில் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுவிடுகிறது.. அவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்வதற்குள் சிலர் உயிரிழந்துவிடும் சோகமும் நடக்கிறது.. இதுபோன்றவர்களுக்கு அவசரத்துக்கு ஆம்புலன்சுகளும் கிடைப்பதில் சிரமம் உள்ளது..

வடசென்னை
இப்படிப்பட்ட சூழலில்தான், கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் வடசென்னையை சேர்ந்த 2 பட்டதாரி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தப்பட்ட ஆட்டோ ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்தி உள்ளனர்... இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.. இதை வெற்றிகரமாக செயல்படுத்தியும் வருகின்றனர்... மூச்சுத் திணறலால் பாதிக்கப்படும் நோயாளிகளை இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில் வைத்து, உடனடியாக ஆக்சிஜன் உதவியுடன் ஆஸ்பத்திரிகளுக்கு அழைத்து சென்று அட்மிட் செய்து வருகின்றனர்..

இலவசம்
இதை இலவசமாகவே செய்கின்றனர்.. கட்டணம் எதுவும் இல்லை. இதை பற்றி வடசென்னையை சேர்ந்த இளைஞர்கள் சொல்லும்போது, வடசென்னை மக்களின் பயன்பாட்டிற்காகவே இப்படி ஒரு ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை உருவாக்கி இருக்கறோம்.. இந்த 2 வாரங்களாகவே ஆட்டோ ஆம்புலன்ஸ் செயல்பட்டு வருகிறது. எந்த நேரமும் செயல்படும் வகையில், இரண்டு ஆக்சிஜன் ஆட்டோ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ளது..

அசத்தல்
ஒருநாளைக்கு 150 முதல் 200 அழைப்புகள் வருகின்றன... இதன் மூலம் 20 முதல் 30 பேர் வரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்கிறோம். இதுவரை 126 பேரின் உயிர்களை காப்பாற்றியும் இருக்கிறோம்.. கொரோனா நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்த பிறகு, கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்கிறோம்... அதனால் யாரும் பயப்பட வேண்டியதில்லை" என்றனர்.
-
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications