வயசான பாட்டிகளை மட்டும் குறி வைக்கும் சுந்தர்.. என்ன காரணம்.. அதிர வைக்கும் பின்னணி!
பாட்டிகளிடம் நகை பறித்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்ட்டார்
Recommended Video
சென்னை: வயசான பாட்டிகளை மட்டுமே குறி வைக்கிறார் இளைஞர் சுந்தர். ஏன்.. என்ன காரணம் என்பதை அறிந்த போலீஸ், சுந்தரை தூக்கி கொண்டு போய் ஜெயிலில் அடைத்துவிட்டது!
சென்னை செம்மஞ்சேரி, துரைப்பாக்கம், நீலாங்கரை, திருவான்மியூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களுக்கு நகை திருட்டு சம்பந்தமாக நிறைய புகார்கள் ஒரே சமயத்தில் வர ஆரம்பித்துவிட்டன.

இதனால் திகைத்து போன செம்மஞ்சேரி போலீசார், இதற்காகவே ஒரு தனிப்படை அமைத்து, நோட்டமிட்டு வந்தனர். அப்போதுதான், சிசிடிவி காமிராவில் சுந்தர் என்பவர் சிக்கினார். இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது வேலையே, யாராவது வயசான பாட்டி கடைகளில், வீட்டு வாசப்படிகளில் உட்கார்ந்திருந்தால் அவர்களிடம் சென்று ஏமாற்றுவதுதான்.
பாட்டிகளிடம், "பக்கத்துல சேட்டு வீட்டுல கிரகப்பிரவேசம் நடக்குது. நீங்க வயசானவங்க.. நேரில் வந்து ஆசீர்வாதம் பண்ணினால் 1000 ரூபாய் தருவாங்க" என்று சொல்வாராம். பணத்துக்கு ஆசைப்பட்ட பாட்டிகளும் ஆட்டோவில் ஏறி கொள்வார்களாம்.
சிறிது தூரம் சென்ற பிறகு, "பாட்டி.. கழுத்தில், காதில் நகைகளை பார்த்தால், சேட்டு காசு தர மாட்டார். கழட்டி என்கிட்ட தாங்கள்" என்று நைசாக பேசி வாங்கி விடுவாராம். கறார் பாட்டிகளாக இருந்தால், கத்தியை காட்டி மிரட்டி நகையை பிடுங்கி கொண்டு பாதியிலேயே இறக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவாராம்.
சிசிடிவி கேமராவில் பதிவான அந்த ஆட்டோ நம்பரை வைத்துதான், சுந்தரை பிடித்திருக்கிறார்கள் போலீசார். இவர் ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார் சுந்தர். அவரிடமிருந்துஆட்டோ, 9 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்து, இப்போது ஜெயிலில் அடைத்துவிட்டனர்
-
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications