Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆரம்பமே 50 ரூபாய்.. தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் அதிரடியாக உயர்கிறது! எவ்வளவு? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் ஆட்டோ கட்டணம் உயர்வதாக ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ள நிலையில், ஓட்டுநர்கள் சார்பில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் 1.8 கிமீ-க்கு 50 ரூபாயும், கூடுதல் தூரம் செல்ல ஒரு கிமீ-க்கு ரூ.18 என்ற வகையில் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் தொடங்கி குக்கிராமங்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் ஆட்டோக்களில் பயணிப்பதை பார்க்க முடியும். வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ் இல்லை என்றால் உடனே ஆட்டோக்களை வாடகைக்கு எடுத்து அதில் பயணம் செய்கிறார்கள்.

auto auto fare tamil nadu

அதேபோல, கிரமங்களிலும் பேருந்து வசதி இல்லையென்றாலோ, அவசர தேவைக்கோ ஆட்டோக்களையே மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆட்டோக்களை பொறுத்தவரை கட்டணம் சில நேரங்களில் அதிகப்படியாக வசூலிப்பதாகவும் பயணிகள் தரப்பில் ஆதங்கம் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான நேரத்தில் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளிடம் மிக அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் அவ்வப்போது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.

ஓலா, உபேர் போன்ற செயலிகளில் புக் செய்தாலும் கூட கூடுதலாக கட்டணத்தை கொடுக்க ஒரு சில ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்துவதாகவும் பயணிகள் முன்வைக்கும் புகாராக உள்ளது. அதேவேளையில், 12 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் அரசு கட்டணத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருவதாகவும் ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் கூறும் கருத்தாக உள்ளது. கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது.

அதன்பிறகு 12 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் மாற்றி அமைக்கப்படவில்லை என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறி வருகிறார்கள். தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்ட போதிலும் அரசு இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஆட்டோ டிரைவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆட்டோ டிரைவர்கள் சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த 12 வருடங்களாக ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படமால் உள்ளது. இதனால், ஆட்டோ டிரைவர்கள் சார்பில் புதிய கட்டணம் வசூலிக்கப்படும். 50 சதவீதம் அளவுக்கு கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படும். அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 வசூலிக்கப்படும்.

வெயிட்டிங் சார்ஜ்க்காக ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1.50 வசூலிக்கப்படும். இரவு 11 மணி முதல் 5 மணி வரையிலான சேவைக்கு 50 சதவீதம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ப்ரீபெய்டு ஆட்டோக்கள் இந்த கட்டண அடிப்படையில் தான் இயக்கப்படுகின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு உரிமைக்குரல் டிரைவர் தொழிற்சங்க செயலாளார் ஜாகீர் உசைன் கூறுகையில், " விலை வாசி உயர்வு, ஆர்.டி.ஓ செலவுகள் அதிகரிப்பு ஆகியவற்றால் டிரைவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்த பிறகும் கட்டணத்தை உயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. விலைவாசி அதிகரிப்பால் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டியுள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படும் வரை இந்த கட்டணம் வசூலிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+