நண்பன் மனைவியுடன் தனிக்குடித்தனம்.. நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. ஆத்திரத்தில் இருவர் கொலை!
சென்னை: ஆவடி அருகே மது விருந்து நடந்த இடத்தில் இரட்டை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். அவர் கொலை செய்ததற்கான காரணத்தையும் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை ஆவடியை அடுத்த கொள்ளுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன் (30). ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் (30). இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டில் வெவ்வேறு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட போது இவர்கள் ஒரே சிறையில் இருந்ததால் நண்பர்களானார்கள்.
சிறையிலிருந்து வெளியே வந்த பிறகும் இவர்களின் நட்பு தொடர்ந்தது. இருவரும் ஆவடியில் கஞ்சா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெகன், அடிக்கடி மணிகண்டன் வீட்டுக்கு சென்று வந்தார்.

ஜெகன் மனைவி
அப்போது ஜெகனுக்கும் மணிகண்டன் மனைவி பிரெசில்லாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி ஜெகன் , பிரெசில்லாவை அழைத்துக் கொண்டு தன்னுடனேயே வைத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்த மணிகண்டன், கணவனை இழந்த மாலதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

ஜெகனுடன் சென்ற பிரெசில்லா
தனது மனைவியை ஜெகன் அழைத்து சென்றுவிட்டதால் அவருடன் மணிகண்டனுக்கு தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த வாரம் ஜெகன், தனது நண்பர்களுடன் சேர்ந்து நள்ளிரவில் ஆவடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் மணிகண்டனை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்ததாக தெரிகிறது.

நிர்வாண படம்
அப்போது ஜெகன் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே இந்த வீடியோவை டெலிட் செய்துவிடுவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் ஜெகனை கொலை செய்ய முடிவு செய்தார். இதையடுத்து இரவு 10 மணிக்கு ஜெகன் தனது நண்பர்களான அசாருதீன், சுந்தர் உள்ளிட்டோருடன் உட்கார்ந்து ஆவடி பேருந்து நிலையம் அருகே மது அருந்தி கொண்டிருந்தார்.

மது விருந்து
இதையறிந்து கொண்ட மணிகண்டன் தனது கூட்டாளிகளுடன் ஆவடி பேருந்து நிலையத்தின் பின்புறம் சென்றுள்ளனர். இவர்களை பார்த்தும் ஜெகன் உள்ளிட்டோர் ஓட்டம் பிடித்தனர். ஆனால் தொடர்ந்து மது அருந்தி கொண்டிருந்த ஜெகனின் நண்பர்கள் அசாருதீன், சுந்தர் ஆகியோரை மணிகண்டனின் கூட்டாளிகள் வெட்டி சாய்த்தனர்.

இரட்டை கொலை
இதையடுத்து அவர்களது முகத்தையும் சிதைத்து விட்டு சென்றுவிட்டனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த இரட்டை கொலை சம்பவம் ஆவடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications