Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுங்கியில்.. தூக்கு போட்டு தொங்கிய பழனி.. அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி.. புழலில் பரபரப்பு!

அயனாவரம் சிறுமியை சீரழித்த குற்றவாளி ஜெயிலில் தற்கொலை செய்து கொண்டார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொட்டைமாடி, லிப்ட், டாய்லெட், என இழுத்துகொண்டு போய் அயனாவரம் சிறுமியை பலாத்காரம் செய்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான பழனி தற்கொலை செய்து கொண்டார்.. புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பழனி, தன்னுடைய லுங்கியாலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
தமிழக மக்களால் இன்னமும் மறக்க முடியாத, நினைத்தாலே நெஞ்சில் ஈட்டியால் குத்தக்கூடிய சம்பவம் என்றால் அது அயனாவரம் சிறுமியின் கொடூரம்தான்.. வாய் பேச முடியாத.. காது கேளாத சிறுமி.. வயசு வெறும் 11 தான்!

கடந்த 2018, ஜூன் மாதம் இந்த சம்பவம் வெளியே வந்தது.. ஸ்கூலுக்கு போகும்போதும், வரும்போதும் லிப்டை பயன்படுத்தும்போது, லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் என்ற 66 வயது கொடியவன்தான் இந்த காம செயலுக்கு வித்திட்டவன்.

ayanavaram girl rape case: prisoner palani commits suicide in puzhal jail

இதையடுத்துதான், அங்கு வேலை பார்த்து வந்த பிளம்பர் முதல் தண்ணீர் கேன் போடுபவர் வரை இந்த பெண்ணை சீரழித்துள்ளனர். அதில் ஒருவர்தான் பழனி.. 40 வயது இந்த காம மிருகம், அந்த அப்பார்ட்மென்ட் வாட்சமேன் ஆவார்.. 17 பேரும் சேர்ந்துதான் மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் வெறிச்செயலில் ஈடுபட்டது.

இந்த 17 பேரில் பாபு என்பவர் விசாரணையின்போதே இறந்துவிட்டார்.. குணசேகரன் என்பவரை நீதிமன்றம் விடுவித்த நிலையில், பழனி உட்பட 15 பேருக்கும் கோர்ட் தண்டனை தந்தது. இந்த 15 பேரில் 4 பேருக்கு ஆயுள் கால சிறை தண்டனை அதாவது சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்ற தண்டனை வழங்கப்பட்டது.. சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டதாலேயே இவர்களுக்கு இந்த தண்டனை தரப்பட்டது..

மற்றவர்களுக்கு 7 ஆண்டு, 9 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.. இதில், சாகும்வரை ஜெயில் தண்டனை என்றதில் பழனியும் ஒருவர் ஆவார்.. அவருக்கு வயது 40.. இவர்தான் இன்று ஜெயிலுக்குள்ளேயே தற்கொலை செய்து கொண்டார். தனது லுங்கியால் ஜெயிலில் உள்ள அறையிலேயே தூக்கு போட்டு இறந்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.இவர் கடந்த சில தினங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனினும் பழனியின் தற்கொலை சம்பந்தமாக தொடர் விசாரணை நடக்கிறது.. இந்த சம்பவம் புழலில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+