அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்! சென்னை வந்த 100 கிலோ அட்சதை! ராம் லீலா படத்துடன் அழைப்பு
சென்னை: ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி அயோத்தியில் இருந்து 100 கிலோ அட்சதை சென்னைக்கு வந்துள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடக்கிறது. இந்த விழாவை வெகு விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கும்பாபிஷேக நிகழ்ச்சி விவரங்களை கிராமங்கள் வரை அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்வதோடு அயோத்திக்கு வாருங்கள் என அனைத்து மக்களையும் நேரில் அழைக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்காக அயோத்தியில் வைத்து பூஜிக்கப்பட்ட 100 கிலோ அட்சதை சென்னை கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அளிக்கப்படும். இந்த அட்சதை பிரித்தனுப்பும் நிகழ்வு நாளை காலை 10.30 மணிக்கு சென்னை சேத்துப்பட்டு ஆரிங்டன் சாலையில் உள்ள சின்மயா மிஷன் பள்ளியில் நடைபெறுகிறது.
அட்சதையுடன் ராம் லீலா புகைப்படமும் அழைப்பிதழும் வழங்கி அயோத்திக்கு அழைக்கப்படுகிறார்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications