தனி டம்ளர், சேர்! இவங்களுக்கு இதான் சார் வேலையே! அதிர வைக்கும் அனுராதாவின் பின்னணி! இவ்வளவு வன்மமா?
சென்னை : எஸ்சி பசங்க என்றாலே பிரச்சனைதான் செய்வாங்க.. அந்த பையன் எந்த கம்யூனிட்டி என சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை அனுராதா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏற்கனவே அவர் இதே புகாரில் காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டதும், கல்லூரி பணியாளர்களிடம் கூட சாதிய வன்மத்துடனேயே நடந்து கொண்டதாக பகீர் புகார் கூறுகின்றனர் மாணவர்கள்..
Recommended Video
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வரும் அனுராதா அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் சாதி ரீதியாக பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்களிடையே சாதிய விஷத்தை பரப்பும் வகையில் பேசிய அனுராதா மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

அதிர்ச்சி ஆடியோ
இந்நிலையில், அனுராதா பேசியது என்ன? இவ்வாறு அவர் பேசுவது முதல் முறை தானா? என்பது குறித்த பல்வேறு பின்னணி தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்த அனுராதா தற்போது தமிழ் துறை தலைவராக இருக்கிறார். இவர் தான் கல்லூரி மாணவரிடம் பேசிய ஆடியோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அந்த ஆடியோவில் பேசும் அனுராதா 'முகத்தைப் பார்த்தாலே பி.சி.யா? எம்.பி.சியா? என கண்டுபிடித்து விடுவேன்.

என்ன கம்யூனிட்டி?
நீ என்ன கம்யூனிட்டி? அந்தப் பையன் என்ன கம்யூனிட்டி? என பேசியதோடு எஸ்சி பசங்க என்றாலே பிரச்சனைதான் செய்வாங்க! அந்தப் பையன் எந்த கம்யூனிட்டி?' என பேசி இருக்கிறார். ஆசிரியையின் இந்த அப்பட்டமான ஜாதிப் பேச்சால் அதிர்ச்சி அடைந்த மாணவர் அந்த ஆடியோவை தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த ஆசிரியை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

விசாரணைக்கு மறுப்பு
இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த சென்னை பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் ஆசிரியை அனுராதாவை அழைத்துள்ளது ஆனால் விசாரணைக்கெல்லாம் தன்னால் வரமுடியாது என ஆணவமாக பேசியிருக்கிறார். மேலும் தனக்கு பின்னால் பல 'முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள்' இருக்கிறார்கள்! என்னை ஒன்றும் செய்து விட முடியாது என அவர் மிரட்டியதாகவும் நம்மிடம் பேசிய கல்லூரி பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சை புதிதல்ல!
மேலும் பேராசிரியை அனுராதா சாதி ரீதியான சர்ச்சையில் சிக்குவது ஒன்றும் புதிதல்ல எனவும் கடந்த ஆண்டும் இதே போல ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தன்னிடம் பயிலும் மாணவர்களிடம் சாதி ரீதியாக பேசியதாக புகார் எழுந்த நிலையில் இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் அனுராதா மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. அந்த வகையில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இருந்து காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார் அனுராதா.

சாதி ஆணவம்
அதன் பின்னர் தன் மீது அவதூறு பரப்பும் வகையிலும் காழ்ப்புணர்ச்சியோடும் கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாகவும் தன்னை உரிய காரணம் இன்றி காஞ்சிபுரத்துக்கு மாற்றியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதை அடுத்து அனுராதாவுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய நிலையில் மீண்டும் பச்சையப்பன் கல்லூரிக்கு திரும்பிய அனுராதா தனது இயல்பினை மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து சாதிய வன்மத்தை கக்கும் வகையில் மாணவர்களிடம் நடந்து கொண்டிருக்கிறார். மேலும் தான் அமர்ந்திருக்கையில் கூட வேறு ஆசிரியைகள் அமரக்கூடாது எனவும் வீட்டிலிருந்து டம்ளர் தட்டு உள்ளிட்ட பொருட்களை எடுத்து வருவதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலோடு தூய்மை பணியாளர்களை அருகில் கூட அனுமதிக்க மாட்டார் என்கின்றனர் அவரிடம் படித்த மாணவர்கள்.
-
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications