Bakrid: தமிழ்நாட்டில் வரும் 28 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு
சென்னை: மே 28 ஆம் தேதி பக்ரீத் பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் அறிவித்துள்ளார். துல்ஹஜ் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழகத்தில் தென்படவில்லை என்றும், இதனால் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறையாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் வரும் மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகை
இஸ்லாமியர்களின் முக்கியமான புனித பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் திருநாள் கருதப்படுகிறது. ஹஜ் பெருநாளாகவும் அழைக்கப்படும் இந்தப் பண்டிகை, ஆண்டுதோறும் உலகம் முழுவதும் முஸ்லிம் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைத்தூதர் இப்ராஹிம் நபியின் தியாக உணர்வை நினைவுகூரும் வகையிலேயே பக்ரீத் திருநாள் அனுசரிக்கப்படுகிறது.
இஸ்லாமிய மரபின் படி, இறைத்தூதர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் ஆணையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்குப் பறைசாற்றும் விதமாக இந்தப் புனித பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்ராஹிம் நபியின் அர்ப்பணிப்பையும், இறைநம்பிக்கையையும் போற்றும் விதமாக இந்த பண்டிகை கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை
பக்ரீத் நாளில் முஸ்லிம் மக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபடுவதுடன், குர்பானி வழங்கும் வழக்கத்தையும் பின்பற்றுகின்றனர். மேலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுடன் அசைவ உணவுகளை பகிர்ந்து மகிழ்வதும் இந்த திருநாளின் முக்கிய அம்சமாகும்.
பிறை காணப்படுவதன் அடிப்படையில் பக்ரீத் பண்டிகை தேதி உறுதி செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டிற்கான பக்ரீத் பண்டிகை மே 28 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி உஸ்மான் அறிவித்துள்ளார். துல்ஹஜ் மாதத்திற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை மாலை (அதாவது மே 17 ஆம் தேதி) தமிழகத்தில் தென்படவில்லை என்றும், இதனால் செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் மாத முதல் பிறையாக கருதப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பெருநாள் வரும் மே 28 ஆம் தேதி தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.














Click it and Unblock the Notifications