பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுப்பு!
Recommended Video

சென்னை: 3 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிரான பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, கடந்த 1998ம் ஆண்டு பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. அதன் பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது.

தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து, தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும். வாகனத்தை தாக்கி எரித்ததாக நேரடி குற்றச்சாட்டு இல்லை என பாலகிருஷ்ண ரெட்டி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இன்று அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் ஆய்வாளரை திட்டியதால் என் கட்சிக்காரர் மீது வழக்கு என காவலரே சாட்சி அளித்துள்ளார். 28 சாட்சிகளில் ஒருவர் கூட என் கட்சிக்காரர் பெயரை சொல்லவில்லை.
வழக்கில் 72வது நபராக பாலகிருஷ்ண ரெட்டி குற்றம்சாட்டப்பட்டுள்ளார், நேரடியாக இல்லை என பாலகிருஷ்ணன் ரெட்டி தரப்பு வக்கீல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்கிறீர்களா? மேலும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி கேட்டார். இதையடுத்து மாலையில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அப்போது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட மறுத்த கோர்ட், பாலகிருஷ்ண ரெட்டியின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2016ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஓசூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பாலகிருஷ்ண ரெட்டி. தற்போது தண்டனையை நிறுத்தி வைக்க ஹைகோர்ட் மறுத்து விட்டதால் பாலகிருஷ்ண ரெட்டி கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கனவே இந்த தண்டனை காரணமாக அவரது எம்எல்ஏ பதவியும் பறி போய் விட்டது குறிப்பிடத்தக்கது.
-
Savukku Shankar: சவுக்கு சங்கர் நாளைக்குள் சரண் அடைய வேண்டும்.. இல்லையென்றால் கைது செய்யலாம்! ஐகோர்ட் அதிரடி -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கௌதம் மேனனுக்கு எதிராக திரும்பிய வழக்கு.. ரூ4.25 கோடியை வட்டியுடன் செலுத்த ஐகோர்ட் உத்தரவு! -
இயக்குநர் ஷங்கர் சொத்து முடக்கப்பட்டதற்கு விதிக்கப்பட்ட தடை.. சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?











Click it and Unblock the Notifications